புதுச்சேரி,பிப்.4- ரேசன் கடைகளை திறக்கக் கோரி போராட்டம் நடத்திய பெண்கள் மீது பதிவு செய்துள்ள பொய் வழக்கை திரும்பப் பெற வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி புதுச்சேரி அரசை வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து கட்சியின் மாநிலச் செயலாளர் ஆர். ராஜாங்கம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:- குடியிருப்பு பகுதிகளில் ரெஸ்ட்ரோ பார் மற்றும் மது பான விடுதிகளை திறக்கும் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக கூட்டணி அரசு, பல மாதங்களாக மூடப்பட்டுள்ள ரேசன் கடைகளை திறக்க மறுத்து வருகிறது. ரேசன் கடைகளை திறக்கக் கோரி தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் உள்ளிட்ட அனைத்து பெண்கள் கூட்டமைப்பு சார்பில் தட்டாஞ்சாவடி குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு சமீபத்தில் போராட்டம் நடை பெற்றது.
சம்பவ இடத்திற்கு வந்த குடிமை பொருள் வழங்கல் துறை இயக்குனர் சக்திவேல் சங்க நிர்வாகிகளிடம் பேச்சு வார்த்தை நடத்தினார். அப்போது ரேசன் கடைகளை திறப்ப தற்கான கோப்பு அரசுக்கு அனுப்பபட்டுள்ளது என்றும், இன்னும் சில வாரங்களில் அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும், மேலும் போராட்டத்தை கைவிட என்று கேட்டுக் கொண்டார். அதிகாரி யின் உறுதியை ஏற்று போராட்டம் கைவிடப்பட்டது. இந்த போராட்டத்தை எப்படி யாவது சீர்குலைக்க வேண்டும் என்று ஆரம்பம் முதல் காவல்துறையினர் பல்வேறு தடை களை ஏற்படுத்தினர். இதனால் பெண்கள் சாலையில் அமர்ந்து போராடினர். பெண்கள் தங்கள் அன்றாட வேலையை விட்டு, குடும்பத்தின் சிரமங்களுக்கு மத்தியில் இப்போராட்டத்தில் ஈடுபடுவதற்கு மத்திய மாநில அரசுகளே காரணமாக இருக்கும் போது, போராட்டத்தில் பங்கேற்ற பெண்கள் கூட்டமைப்பினர் மீது காவல்துறை பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து இருப்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வன்மையாக கண்டிக்கிறது. மக்கள், அதுவும் பெண்கள் போராட்டத்தில் பங்கேற்க கூடாது, மீறி பங்கேற்றால் வழக்கு பதிவு செய்து அவர்க ளின் போராட்ட உணர்வை முடக்க நினைக்கும் புதுச்சேரி என் ஆர் காங்கிரஸ் பாஜக கூட்டணி அரசை மார்க்கஸ் கம்யூ னிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிக் கிறது. பெண்கள் மீது போடப் பட்டுள்ள பொய் வழக்கை ரத்து செய்துவிட்டு ரேஷன் கடை களை உடனே திறக்க முன்வர வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி புதுச்சேரி மாநிலக்குழு அரசை வலியுறுத்து கிறது. இவ்வாறு அவர் தெரி வித்திருக்கிறார்.