districts

ஆரோவில்  55ஆம் ஆண்டு விழா  இன்று தொடக்கம்

புதுச்சேரி, பிப். 20- புதுவையிலிருந்து 12 கி.மீ. தொலைவில் ஆரோவில் சர்வதேச நகரம் அமைந்துள்ளது. 1968ஆம் ஆண்டு பிப்ரவரி 28ஆம் தேதி ஆரோவில் கட்டுமான பணிக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. தாமரை மொட்டு வடிவில் சலவை கல்லால் ஆன ஒரு தாழியில் உலகத்தின் 121 நாடுகள், இந்தியாவின் 25 மாநிலங்களின் மண் இடப்பட்டது. சர்வதேச நகரில் 50 ஆயிரம் பேர் வசிக்க திட்டமிட்டு பணிகள் நடந்தது. நகரின் மையத்தில் ஆரோவில் மாத்ரி மந்திர் அமைந்துள்ளது. அதை சுற்றிலும் பூந்தோட்டங்கள் உள்ளன. இந்த மைய பகுதியை பேரமைதி என அழைக்கின்றனர். இப்போது பல்வேறு நாடுகளை சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இங்கு வசிக்கின்றனர். ஆரோ வில் சர்வதேச நகரின் 55ஆம் ஆண்டு விழாவை கொண்டாட ஆரோவில் வாசிகள் தயாராகி வருகின்றனர். செவ்வாய்க்கிழமை (பிப். 20) அன்னை யின் பிறந்தநாள் முதல் ஆரோவில் தினமான 28ஆம் தேதி வரை தொடர்ந்து கொண்டாட்டங்கள் நடைபெறுகிறது. இதனால் ஆரோவில் சர்வதேச நகரம் விழாக்கோலம் பூண்டுள்ளது. ஆரோவில் உதயதினமான 28ஆம் தேதி போன்பயர் எனப்படும் தீ மூட்டி கூட்டு தியானத்தில் ஆசிரம பக்தர்கள் ஈடுபட உள்ளனர். தினசரி கருத்தரங்கம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

;