புதுச்சேரி, ஜூலை 4- எல்ஐசி அனைத்து கிளை களிலும் ஒரே மாதிரியான சேவைகளை நடைமுறைப் படுத்த வேண்டும் என்று லிகாய் வேலூர் கோட்ட மாநாடு வலியுறுத்தியுள்ளது. அகில இந்திய எல்ஐசி முகவர்கள் (லிகாய்) சங்க வேலூர் கோட்ட 4 வது மாநாடு புதுச்சேரியில் தோழர் சுத்தானந்தம் நினைவரங்கத்தில் நடைபெற்றது. கோட்டத் தலைவர் அன்பரசிஜூலியட் தலைமை தாங்கினார். சங்கத்தின் மாநிலப் பொருளாளர் தாமோதரன், மாநிலக் குழு உறுப்பினர் சம்பத், எஸ்சி, எஸ்டி ஊழியர் சங்க செயலாளர் பிரகாஷ், தமிழ்நாடு மாநில செயல் தலைவர்கள் பூவ லிங்கம், ராம்ஜி, சிஐடியு புதுவை பிரதேச தலைவர் முருகன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். சங்கத்தின் கோட்ட பொதுச் செயலாளர் வெங்கடேசன் வேலை அறிக்கையை சமர்ப்பித் தார். தமிழ் நாடு மாநில பொதுச் செயலாளர் எஸ்.ஏ. கலாம் நிறைவுரையாற்றினார்.
நிர்வாகிகள்
சங்கத்தின் தலைவராக டி.அசோகன், கவுரவத் தலை வராக ஜோதி, பொதுச் செயலா ளராக எஸ்.ரமேஷ், பொருளா ளராக பழனிசாமி ஆகியோர் புதிய நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்டனர்.
தீர்மானம்
எல்ஐசி சேவைகளுக்கு அனைத்து கிளைகளிலும் ஒரே மாதிரியான நடைமுறைகளை வகுக்க வேண்டும். பாலிசி பத்திரங்கள் மக்கள் அறிந்து கொள்ளும் வகையிலும் பிராந் திய மொழியிலும் வழங்க வேண்டும். எல்ஐசி முகவர்க ளுக்கு வழங்கப்பட்டு வரும் குழு காப்பீட்டுத் தொகை ரூ. 25 லட்சமாக உயர்த்த வேண்டும். அதற்கான பிரீமிய தொகையை எல்ஐசி நிறுவனமே செலுத்த வேண்டும். சேம நல நிதியை ஏற்கனவே ஏற்றுக் கொண்ட அடிப்படையில் ரூ. 5 லட்சம் மாக உயர்த்தி வழங்க வேண்டும். எல்ஐசி பாலிசிக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரியை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங் கள் மாநாட்டில் நிறைவேற்றப் பட்டது.