புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி ஊராட்சி ஒன்றியம் செவலூர் ஊராட்சியில் ‘‘கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம்’’ மருத்துவ முகாமை சட்டத் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி துவக்கி வைத்தார். ஒன்றிய குழு தலைவர் சுதாஅடைக்கலமணி, உதவி ஆணையர் (கலால்) மாரி, துணை இயக்குநர் (சுகாதாரப் பணிகள்)ராம்கணேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.