districts

சிபிஎம் போராட்டம் வெற்றி சாலைகள் அமைத்துத் தர அதிகாரிகள் ஒப்புதல்

புதுக்கோட்டை, மே 28 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தொடர் போராட்டத்தைத் தொடர்ந்து குன்றாண்டார்கோவில் ஒன்றியத்தில் குறிப்பிட்ட கால இடைவெளிக்குள் சாலைகள் அமைத்துத் தர அதிகாரிகள் ஒப்புதல் அளித்துள்ளனர்.  புதுக்கோட்டை மாவட்டம் குன்றாண் டார்கோவில் ஒன்றியத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள சாலைகள் மிகவும் பழுதடைந்துள்ளதால் போர்க்கால அடிப் படையில் புதிய சாலைகள் அமைத்துத்  தர வலியுறுத்தி, மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி சார்பில் சனிக்கிழமை குன்றாண்டார்கோவிலை அடுத்த நால்  ரோட்டில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஏ.ஸ்ரீதர் தலைமை வகித்தார். மாவட்டக்குழு உறுப்பினர் கே.தங்கவேல், ஒன்றியச் செயலாளர் எஸ்.கலைச்செல்வன், பேரூராட்சி கவுன்சிலர் மகாலெட்சுமி, ஒன்றியக்குழு உறுப்பினர்கள் பழனி வேல், செல்வராஜ், பழனிச்சாமி, சாந்தா  உள்ளிட்டோர் பங்கேற்றனர். போராட்டத்தைத் தொடர்ந்து அதிகா ரிகள் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தி னர். குளத்தூர் வட்டாட்சியர் பெரிய நாயகி தலைமையில் நடைபெற்ற பேச்சு வார்த்தையில், குன்றாண்டார்கோவில் வட்டார வளர்ச்சி அலுவலர் நலதேவன் மற்றும் காவல்துறை அதிகாரிகள் பங்கேற் றனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்களும் பங்கேற்றனர். பேச்சுவார்த்தையில், மின்னாத்தூ ரில் இருந்து ராமுடையான்பட்டி, கொப்பம் பட்டியிலிருந்து மங்கனூர், அண்டக்குளத் திலிருந்து பெரியதம்பி உடையான் பட்டி, பாப்புடையான்பட்டியிலிருந்து நரங்கிப்பட்டி, ஒடுகம்பட்டியிலிருந்து திருப்பூர், வாழமங்கலத்திலிருந்து மோசகுடி, ஆவுடையான் கோவில் பட்டியிலிருந்து வாலியம்பட்டி, புலியூரி லிருந்து வாலியம்பட்டி, புலியூரிலிருந்து உறவிக்காடு, திருப்பூரிலிருந்து பெரண் டையான்பட்டி, பெரம்பூரிலிருந்து வத்த னாகோட்டை, உறவிக்காட்டிலிருந்து செட்டிபட்டி ஆகிய சாலைகள் மாநில நெடுஞ்சாலைத்துறைக்கு ஒப்படைப்பு செய்யப்பட்டு, அரசாணைகள் வரப்  பெற்று சாலை மேம்பாடு செய்ய நடவ டிக்கையில் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மின்னாத்தூரில் இருந்து தெம்மாவூர் செல்லும் சாலை பிரதம மந்திரி கிராம  சாலைகள் திட்டத்தில் பணிகள் மேற் கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வரு கிறது. மேற்படி சாலை தொடர்பாக அர சாணை மற்றும் நிதியுதவி பெற்று நான்கு மாத காலத்திற்குள் பணிகள் மேற் கொள்ளப்படும் என அதிகாரிகள் தெரி வித்துள்ளனர். இது மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் தொடர்ச்சியான போராட் டத்திற்கு கிடைத்த வெற்றி என மேற்படி  பகுதிகளின் பொதுமக்கள் மகிழ்ச்சி தெரி வித்துள்ளனர்.