பொன்னமராவதி, அக்.14 - புதுக்கோட்டை மாவட்டம் பொன்னம ராவதியில் தீ விபத்தினால் கடையை இழந்து பாதிக்கப்பட்ட முத்துலட்சுமி பாண்டிய னுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் உதவி செய்தனர். வியாழனன்று அதிகாலை பொன்னமரா வதி மலையான் ஊரணி அருகே முத்து லட்சுமி என்ற பெண்ணுக்கு சொந்தமான தேநீர் கடை, தீ விபத்தினால் முற்றிலும் எரிந்து சேதமானது. இந்நிலையில், வெள்ளியன்று சிபிஎம் பொன்னமராவதி ஒன்றியச் செய லாளர் என்.பகுருதீன் தலைமையிலான உறுப்பினர்கள், முத்துலட்சுமியை சந்தித்து அரிசி, மளிகை பொருட்கள், காய்கறி, துணி உள்ளிட்ட பொருட்களை வழங்கி உதவினர். சிபிஎம் ஒன்றியக் குழு உறுப்பினர்கள் உடையாம்பட்டி ராமசாமி, குமார், பாண்டி யன், மதியரசி மற்றும் திராவிடர் கழக ஆறு முகம், மே 17 இயக்கம் ஹைதர் அலி, சிபிஎம் நிர்வாகி திருக்களம்பூர் ராமசாமி, அய்யாத்துரை உள்ளிட்டோர் உடனிருந்த னர்.