districts

img

பாதாளச் சாக்கடை திட்டம் நிறைவேற்றப்படும் அமைச்சர் மெய்யநாதன் உறுதி

அறந்தாங்கி: புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி நகர்மன்ற தேர்த லில் 27 வார்டுகளிலும் போட்டியிடும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து அனைத்து வார்டுகளிலும்  சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் பிரச்சாரம் மேற்கொண்டார்.  24 வது வார்டில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சம்சாத்பேகத்திற்கு வாக்கு கேட்டு பேசிய அமைச்சர் மெய்யநாதன், நீண்ட நாள் கோரிக்கையான நகரில் பாதாள சாக்கடை திட்டம் நிறைவேற்றப் படும். அரசின் திட்டங்கள் அனைத்தும் மக்களுக்கு நேரிடையாக கிடைக்கும். எனவே, மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெற செய்ய வேண்டும் என்று அமைச்சர் மெய்யநாதன் பேசினார். மார்க்சிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் எஸ்.கவிவர்மன் மற்றும் கூட்டணி கட்சியினர் உடனிருந்தனர்.

;