districts

img

புதுகை ஆட்சியரகத்தில் சமத்துவ பொங்கல் விழா

புதுக்கோட்டை, ஜன.12-  புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில், மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழா வியாழனன்று நடைபெற்றது. விழாவில், கிராமிய கலைஞர்கள் மூலமாக தப்பாட்டம், சிலம்பாட்டம், கிராமிய பாடல்கள், நாதஸ்வரம், தவி லிசை உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. இத னைத் தொடர்ந்து, கோலப்போட்டி, உறியடித்தல், பாட்டில் தண்ணீர் நிரப்புதல், லெமன்-ஸ்பூன் லிங்க், கயிறு இழுத்தல், மியூசிக்கல் சேர் உள்ளிட்ட கிராமிய விளை யாட்டுப் போட்டிகள் நடைபெற்றன.  போட்டிகளில் வெற்றிபெற்ற அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு பரிசுகளை வழங்கினார். நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி, தனி மாவட்ட வருவாய் அலுவலர் (காவேரி-வைகை-குண்  டாறு) ஆர்.ரம்யாதேவி, மாவட்ட வருவாய் அலுவலர் (நெடுஞ்சாலை நிலமெடுப்பு) பெ.வே.சரவணன் உள் ளிட்டோர் பங்கேற்றனர்.

;