புதுக்கோட்டை, டிச.4- சுற்றுச்சுவரை இடிக்க கெடுவிதித்த வருவாய்த்துறையினர் மற்றும் காவல்துறை யினரைக் கண்டித்து குளத்தூர் வட்டாட்சி யர் அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் சார்பில் காத்திருக்கும் போராட்டம் நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் தாலுகாவிற்கு உட்பட்டது மேலூர் கிராமம். இந்தக் கிராமத்தைச் சேர்ந்த வி.ரெங்கசாமி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் உறுப்பி னராக உள்ளார். இவர் ஏற்கனவே, நில அளவைத்துறையினர் மூலம் நில அளவை செய்து தனது வீட்டைச் சுற்றி சுற்றுச்சுவர் எழுப்பியுள்ளார். இந்நிலையில், அரசியல் காழ்ப்புணர்ச்சி யின் காரணமாக மேற்படி சுவர் அரசுப் புறம்போக்கு இடத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளதாக வருவாயத்துறையின ருக்கு சிலர் புகார் தெரிவித்துள்ளனர். அதன் படி எந்தவித முன்னறிவிப்பும், கால அவகாச மும் கொடுக்காமல் 24 மணி நேரத்திற்குள் சுற்றுச்சுவரை அகற்ற வேண்டுமென வரு வாய்த்துறையினர் மற்றும் காவல்துறையின் சார்பில் ரெங்கசாமி வீட்டில் நோட்டீஸ் ஒட்டி யுள்ளனர். வருவாய்த்துறையினரின் இத்தகைய அராஜகப் போக்கைக் கண்டித்து குளத் தூர் வட்டாட்சியர் அலுவலம் முன்பாக நடை பெற்ற காத்திருக்கும் பேராட்டத்திற்கு கட்சி யின் ஒன்றியச் செயலாளர் எம்.ஆர். சுப்பையா தலைமை வகித்தார். ஒன்றியக் குழு உறுப்பினர்கள் டி.ரகுபதி, எம்.நாக ராஜ், ஆர்.லெட்சுமணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கோரிக்கைகளை விளக்கி மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.சண் முகம் மற்றும் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் பேசினர்.