புதுக்கோட்டை, மார்ச் 30- தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் புதுக்கோட்டை நகரக்கிளை சார்பில் வாசல் இலக்கியக் கூட்டம் திங்கள்கிழமை புதுக்கோட்டை அறிவியல் இயக்க அரங்கத்தில் நடைபெற்றது. சங்கத்தின் கிளைச் செயலாளர் சு.பீர்முகமது தலைமை வகித்தார். கவிஞர் ஜீவி-யின் ‘ஆனா’ நூல்குறித்து கவிஞர் ராசி.பன்னீர்செல்வம் ஆய்வுரை வழங்கினார். நூலாசிரியர் ஜீவி ஏற்புரை வழங்கினார். “யானை பிச்சை எடுக்கலாமா?” என்ற தலைப்பில் கவிஞர் நா.முத்துநிலவன், “பெண் எனும் ஆளுமை” என்ற தலைப்பில் கடலரசி ஆகியோர் மகளிர்தின உரை நிகழ்த்தினர். கவிஞர்கள் மகாசுந்தர், விஜய் ஆனந்த், கதீஜாபேகம், ஜெயா, ப.வெங்கடேசன் உள்ளிட்டோர் கவிதை வாசித்தனர். மாவட்டச் செயலாளர் சு.மதியழகன் வாழத்திப் பேசினார். முன்னதாக காசாவயல் கண்ணன் வரவேற்க, புதுகை புதல்வன் நன்றி கூறினார்.