districts

img

மாரத்தான் போட்டியில் வென்ற மாணவர்களுக்கு பாராட்டு

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலத்தில் நடைபெற்ற சுற்றுச்சூழல் விழிப்புணர்வு மாரத்தான் போட்டியில், பேராவூரணி அமிழ் ஸ்போர்ட்ஸ் அகாடமி மாணவர்கள்  வெற்றி பெற்றனர். சுற்றுச்சூழல் மாரத்தான் போட்டியில் ரிஷ்வா (7), போட்டி தூரமான 21 கிலோமீட்டரை முழுமையாக நிறைவு செய்தார். மேலும் போட்டியில் கலந்து கொண்ட 15 மாணவர்களையும், பேராவூரணி வட்டாட்சியர் த.சுகுமார் நேரில் சந்தித்து பாராட்டு தெரிவித்தார். வெற்றி பெற்றதற்கான சான்றிதழ்களை மாணவர்கள் வட்டாட்சியரிடம் காண்பித்து வாழ்த்துப் பெற்றனர். நிகழ்வில், தலைமை ஆசிரியர் சித்ரா தேவி, ஆசிரியர் காஜா முகைதீன், ஆசிரியர் கௌதமன், அமிழ் ஸ்போர்ட்ஸ் அகாடமி நிர்வாக இயக்குநர் பிரவீனா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.