districts

img

நூறுநாள் வேலைத் திட்டத்தில் தொழிலாளர்களை அலைக்கழிப்பதா?

புதுக்கோட்டை, ஜூன் 3 - நூறுநாள் வேலைத் திட்டத்தில் விவசாயத்  தொழிலாளர்களை காலை 7 மணிக்கே வரச் சொல்லி அலைக்கழிக்கும் நடவடிக்கைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமென ஜனநாயக மாதர் சங்கம் வலியுறுத்தி உள்ளது. அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் புதுக்கோட்டை மாவட்டம் அன்ன வாசல் ஒன்றிய 6 ஆவது மாநாடு அன்னவாச லில் வியாழக்கிழமை நடைபெற்றது. மாநாட் டிற்கு ஒன்றியத் தலைவர் எஸ்.ரஞ்சிதா தலைமை வகித்தார். டி.சுகன்யா கொடியேற்றி னார். எல்.சுகன்யா அஞ்சலி தீர்மானம் வாசித் தார். மாநாட்டை தொடங்கி வைத்து மாவட்டத்  தலைவர் பி.சுசீலா பேசினார். ஒன்றியச் செய லாளர் ஜெ.தனலெட்சுமி வேலை அறிக்கை வாசித்தார்.  தலைவராக எஸ்.ரஞ்சிதா, செயலாளராக எஸ்.கலைச்செல்வி, பொருளாளராக பி.தேன்மொழி, துணைத் தலைவர்களாக செல்லமுத்து, ஈஸ்வரி, துணைச் செயலா ளர்களாக தேவி, தனலெட்சுமி ஆகியோர்  புதிய நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்ட னர். புதிய நிர்வாகிகளை அறிமுகம் செய்து  மாவட்டச் செயலாளர் டி.சலோமி நிறைவுரை யாற்றினார். முன்னதாக செல்லமுத்து வர வேற்க, செயலாளர் எஸ்.கலைச்செல்வி நன்றி  கூறினார். நூறுநாள் வேலைத் திட்டத்தில் விவசா யத் தொழிலாளர்களை காலை 7 மணிக்கே  வரச்சொல்லி அலைக்கழிக்கும் நடவடிக் கைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். ஆன்லைன் வருகைப் பதிவை ரத்து செய்ய வேண்டும். இத்திட்டத்தை பேரூராட்சி களுக்கும் விரிவுபடுத்த வேண்டும். பெண்கள்,  குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமை களைத் தடுத்து நிறுத்த வேண்டும். பல்வேறு  வகையான புறம்போக்குகளில் குடியிருந்து வரும் ஏழைகளுக்கு வகைமாற்றம் செய்து பட்டா வழங்க வேண்டும். ஆச்சநாயக்கம் பட்டியில் மிகவும் பழுதடைந்துள்ள சாலை களை செப்பனிட வேண்டும் என்பன  உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.