புதுக்கோட்டை, ஆக.3 - சிந்துவெளி வன்பொருள் என்றால், சங்க இலக்கியம் மென்பொருள் என்றார் சிந்துவெளி ஆய்வாளர் ஆர்.பால கிருஷ்ணன்.
7 ஆவது புதுக்கோட்டை புத்தகத் திரு விழாவின் ஏழாவது நாளான வெள்ளிக் கிழமை, சிந்துவெளி ஆய்வாளர், முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி ஆர்.பால கிருஷ்ணன் பேசுகையில், 1902 ஆம் ஆண்டு பிரிட்டனில் இருந்து மும்பை வந்திறங்கிய ஜான் மார்ஷலுக்கு அப் போது வயது 26. இந்திய தொல்பொருள் துறையின் இயக்குநராக நியமிக்கப்பட்டார்.
1924 ஆம் ஆண்டு சிந்துவெளியில் கிடைத்த பொருட்களை சிம்லாவுக்கு கொண்டுவரச் சொல்லி வைத்து, ஆய்வு செய்து பார்த்தார் ஜான் மார்ஷல். அவர் தான் இந்தியாவில் இதுவரை சொல்லப்பட்ட வரலாற்றை விடவும் முக்கியமாக நகர நாகரித்தைக் கொண்ட இடம் சிந்துவெளி என அறிவித்தார். தற்போது சிந்துவெளி ஆய்வின் நூற்றாண்டில் இருக்கிறோம்.
தரவுகளைக் கொண்டு வரலாற்றைக் கட்டமைக்காவிட்டால், கட்டுக் கதைகளைத் தான் வரலாறாக நாம் எடுத்துக் கொள்ள வேண்டிய நிலை வரும். 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அற்புதமான நகர அமைப்பை, வாழ்க்கையைக் கொண் டவர்கள் சிந்துவெளியினர் என உறுதி செய்தார் ஜான் மார்ஷல். இதில், சங்க இலக்கியத்துடன் ஒப்பிட்டு, சிந்து வெளியை நிறுவ முற்படும்போது, இவை இரண்டின் உடல்மொழிகளைத்தான் நான் எடுத்துக் கொள்கிறேன்.
இறந்த ராஜாவுக்கு பிரம்மாண்ட மான அடையாளத்தை வைத்துச் சென்றது தான் பிரமிடு. ஆனால், சாதாரண மக்க ளின் வாழ்க்கையை தெருக்களாக, வீடு களாக அடையாளமாக வைத்துச் சென் றது சிந்துவெளி. குளிக்கும் இடம், உடை மாற்றும் இடம், முதல் தளத்தில் கழிப் பறை, அதற்கான வடிகால்கள் என பிரம் மாண்டமான நகர நாகரீகம் செழித்து வளர்ந்திருந்தது சிந்துவெளி.
ஆனால், இந்திய வரலாற்றில் துணை வரலாறாகத்தான் தெற்கின் வரலாற்றைப் பதிவு செய்திருப்பார்கள்.
காதலையும் அரசியலையும் சங்க இலக்கியங்களின் பெண்பால் புலவர்கள் சிறப்புடன் பதிவு செய்திருக்கிறார்கள். மேல், கீழ் இருமையைக் கொண்ட புவியி யல் அமைப்பு, சங்க இலக்கியத்திலும் சொல்லப்பட்டிருக்கிறது. சிந்துவெளியின் நகரக் கட்டமைப்பிலும் இருக்கிறது.
கடல் தெரியாதவன் இந்தியப் பண்பாட் டுக்குள் வாழ்ந்திருக்கவே முடியாது. கடல்சார் வாழ்க்கையின் அத்தனை தட யங்களும் சங்க இலக்கியத்திலும் உண்டு, சிந்துவெளியிலும் உண்டு. எருமை மாட்டை மையமாக வைத்த வாழ்க்கை சங்க இலக்கியத்திலும் உள்ளது; சிந்து வெளியிலும் உள்ளது. எனவே, சிந்து வெளி விட்ட இடமும், சங்க இலக்கியம் தொட்ட இடமும் ஒன்றுதான்.
சிந்துவெளி வன்பொருள் (ஹார்டு வேர்) என்றால், சங்க இலக்கியம் மென்பொருள் (சாப்ட்வேர்) என்றுதான் சொல்வேன். வரலாறு என்பது சித்தரிப்பு தான். தரவுகளால் சித்தரிக்கப்பட்டதுதான் வரலாறு. புதுத் தரவுகள் வந்தால் ஏற்றுக் கொள்வோம் என்றார்.
‘புதுக்கோட்டை என்னும் புகழ்க்கோட்டை’ என்ற தலைப்பில் கவிஞர் தங்கம் மூர்த்தி பேசினார். நிகழ்வுக்கு பழனியப்பா மெஸ் உரிமையாளர் கண்ணன் பழனியப்பன் தலைமை வகித்தார்.