districts

img

‘ஜல்லிக்கட்டில் வழிகாட்டு நெறிமுறைகளை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும்’ எஸ்.கே.மிட்டல் வலியுறுத்தல்

புதுக்கோட்டை, ஜன.18-   ஜல்லிக்கட்டுப் போட்டி யில் அரசு வகுத்துள்ள வழி காட்டு நெறிமுறைகளை அதி காரிகள் உறுதிசெய்ய வேண்டும் என இந்திய கால்  நடை நலவாரிய ஜல்லிக் கட்டு ஆய்வுக்குழுத் தலை வர் எஸ்.கே.மிட்டல் தெரி வித்துள்ளார். ஜல்லிக்கட்டுப் போட்டி களை அரசு வகுத்துள்ள நெறிமுறைகளின் அடிப்ப டையில் நடத்துவது தொடர் பாக, புதுக்கோட்டை ஆட்சி யரகத்தில் இந்திய கால்நடை நல வாரிய ஜல்லிக்கட்டு ஆய்வுக் குழுத் தலைவர் மற்றும் கண்காணிப்பு அலு வலர் எஸ்.கே.மிட்டல் புதன்  கிழமை ஆய்வு மேற்கொண் டார்.  பின்னர் அவர் கூறுகை யில், ‘‘தமிழர்களின் பாரம் பரிய விளையாட்டுப் போட்டி யான ஜல்லிக்கட்டினை மீட்  டெடுத்து, தொடர்ந்து நடை பெறும் வகையில், தமிழ்  நாடு அரசு ஜல்லிக்கட்டிற் கான வழிகாட்டு நெறிமுறை களை வகுத்துள்ளது. அரசு வகுத்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளின் அடிப்ப டையில் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடைபெறுவதை மாவட்ட நிர்வாகம் மற்றும்  விழா குழுவினர் உறுதி செய்ய  வேண்டும். முழு உடல் தகுதி பெற்றுள்ள காளைகள் மட் டும் பங்கேற்க வேண்டும்.   பார்வையாளர்களுக்கு எவ்வித இடையூறும் ஏற்  படாத வகையில் இரண்டு  அடுக்கு இரும்பு தடுப்பு களை அமைக்க வேண்டும். வீரர்களுக்கும், காளை களுக்கும் காயங்கள் ஏற் படாத வகையில் தேங்காய் நார் உள்ளிட்டவைகளை கொண்டு நிரப்பிட வேண்டும்.      மனிதர்கள் மற்றும் காளை களுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் மருத்துவ குழு வினர் இருப்பதை உறுதி செய்யவும், நிகழ்ச்சிகள் அனைத்தையும் சிசிடிவி கேமரா மூலம் பதிவு செய்தி டவும் வேண்டும்’’ என்றார். கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு தலை மை வகித்தார். மாவட்ட காவல் கண்கானிப்பாளர் (பொ) ஷியாம்ளா தேவி, ஜல்லிக்கட்டு ஆய்வுக் குழு உறுப்பினர் ஆயூப்கான், மாவட்ட வருவாய் அலுவ லர் மா.செல்வி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவி யாளர் (பொது) து.தங்க வேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.