பொன்னமராவதி, டிச.8- புதுக்கோட்டை மாவட்டம் பொன்னம ராவதி அரசு போக்குவரத்து கழக பணி மனையில் ஓட்டுநராக பணிபுரிபவர் குமார் (45). இவர் பொன்னமராவதி அருகே உள்ள படமிஞ்சி கிராமத்தைச் சேர்ந்தவர். புதன் கிழமை காலை திண்டுக்கல்லில் இருந்து பொன்னமராவதிக்கு அரசு பேருந்தை இயக்கி வந்தார். பொன்னமராவதி அருகே உள்ள மேலைச்சிவபுரி வரும்போது, அவ ருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள் ளது. உடனடியாக பேருந்தை நிறுத்திய அவர், நெஞ்சை பிடித்துக் கொண்டு ஸ்டே ரிங்கில் சாய்ந்துள்ளார். அருகில் இருந்த வர்கள் அவரை மீட்டு பொன்னமராவதி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது, அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மாரடைப்பு ஏற்பட்ட போதும் 50-க்கும் மேற்பட்ட பயணிகளின் உயிரை ஓட்டுநர் குமார் காப்பாற்றி உள்ளார். ஓட்டுநர் குமா ரின் குடும்பத்தை சந்தித்து ஆறுதல் கூறிய, புதுக்கோட்டை போக்குவரத்து கழக மண்டல பொது மேலாளர் குணசேகரன், குமாரின் மனைவிக்கு வேலையும், அரசு சார்பில் ரூ.5 லட்சம் நிதியும், அனைத்துத் தொழிலாளர்கள் சார்பில் ரூ.7.20 லட்சம் நிவாரணம் வழங்க உள்ளோம் என தெரி வித்துள்ளார்.