districts

img

வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி மாணவர்கள் ஆவேசம்:

புதுக்கோட்டை, ஜூலை 4-  ஏழை எளிய மாணவர்களின் மருத்துவராகும் வாய்ப்பை பறிக்கும் ஒன்றிய பாஜக அரசின் நீட் தேர்வை ரத்துசெய்யக்கோரி யும் நீட், க்யூட், யுஜிசி நெட் போன்ற நுழைவுத் தேர்வுகளில் தொடர்ந்து குளறுபடிகளை செய்யும் தேசிய தேர்வு முகமை யைக் (என்டிஏ) கண்டித்தும்,  ஒன்றிய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானை பதவி வில கக் கோரியும் ஜூலை 4 வியா ழக்கிழமையன்று இந்திய மாண வர் சங்கத்தின் தலைமையில் தமிழ கம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.

திருச்சி,தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட் டங்களிலும் கல்லூரி மாணவ,மாண விகள் வகுப்புகளை புறக்கணித்து  இந்திய மாணவர் சங்கத்தின் தலை மையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  புதுக்கோட்டை அரசு மன்னர் கல்லூரியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய மாண வர் சங்கத்தின் கல்லூரி கிளைத் தலைவர் வி.தாரணிபிரியா தலை மை வகித்தார். நகரச் செயலாளர் மகாலெட்சுமி முன்னிலை வகித் தார்.

மாவட்டச் செயலாளர் சா. ஜனார்த்தனன் கண்டன உரை யாற்றினார். சங்கத்தின் கல்லூரி கிளைச் செயலளர் தனுஷ் மற்றும் பலர் கலந்துகொண்டனர். இதேபோல கறம்பக்குடி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி யில் பூவராகவன் தலைமையில் ஹரிராமகிருஷ்ணன் முன்னிலை யில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தஞ்சாவூர்  

தஞ்சாவூர் மன்னர் சரபோஜி அரசு கல்லூரி முன்பு  நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சங்கத்தின் மாநிலச் செயலாளர் கோ. அர விந்தசாமி கண்டன உரையாற்றி னார்.

மாவட்டத் தலைவர் அர்ஜூன்,  மாவட்டச் செயலர் சந்துரு, மாவட்டக் குழு உறுப்பினர் எடிசன், கிளைத் தலைவர் பிரேம்குமார், செயலர் ரஞ்சித் மற்றும் கிளை நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். திருச்சிராப்பள்ளி  

திருச்சி புறநகர் துவாக்குடி அரசு கலைக் கல்லூரி முன்பு மாவட்டத் தலைவர் வைரவளவன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. மாநில துணைச்செயலா ளர் ஜி.கே. மோகன் உரையாற்றி னார். மாவட்ட செயலாளர் ஆமோஸ்,மாவட்ட துணைத்தலை வர் தமிழரசன் ,மாவட்டக் குழு உறுப்பினர்கள் ராஜேஷ், அர்ஜுன், கௌதம், ஶ்ரீதர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

திருவாரூர்

 திருவாரூர் திருவிக அரசு  கலைக் கல்லூரியில் வகுப்புகளை  புறக்கணித்து மாணவர்கள் கல்லூரி முன்பாக ஆர்ப்பாட்டத் தில் ஈடுபட்டனர்.  

 ஆர்ப்பாட்டத்திற்கு கல்லூரி கிளை தலைவர் எஸ்.செல்வ பிரகாஷ் தலைமை வகித்தார், மாவட்ட துணைச் செயலாளர்  வீ.சந்தோஷ், மாவட்டக்குழு உறுப்பினர் சத்தியமூர்த்தி ஆகி யோர் பேசினர்.  

குடவாசல்

 குடவாசல் எம்ஜிஆர் அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் வகுப்பை புறக்கணித்து போரா ட்டம் நடத்தினர்.

போராட்டத்திற்கு கிளை தலைவர்,சிவனேஷ் தலைமை தாங்கினார், கிளை செயலாளர் க.கலைச்செல்வன் முன்னிலை வகித்தார். முன்னாள் மாவட்டத் துணைத் தலைவர் இரா.சூர்யா,மாவட்ட செயற்குழு உறுப்பினர் பா.ரஞ்சித் ஆகியோர் பேசினர்.  

நன்னிலம்

நன்னிலம் பாரதிதாசன் அரசு கலை- அறிவியல் கல்லூரியில்  நடைபெற்ற போராட்டத்திற்கு சங்கத்தின் கிளை தலைவர்  ரஞ்சித் தலைமை வகித்தார்,கிளை செயலாளர் தியாகராஜன் முன்னி லை வகித்தார்.

மாவட்ட துணைத் தலைவர் பா.லெ.சுகதேவ், மாவட்ட செயற்குழு உறுப்பினர் முகிலன் ஆகியோர் பேசினர். மாவட்டக்குழு உறுப்பினர்கள் சூர்யா, கௌசிகன் மற்றும் கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

கும்பகோணம்  

கும்பகோணம் அரசினர் கல்லூரி மாணவர்கள் வகுப்பு களை புறக்கணித்து கல்லூரி முன்பு  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சங்கத்தின் கிளைத் தலைவர் பரசுராமன் தலைமை வகித்தார். கிளைச் செயலாளர் சி.கோபிநாத், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராகுல் ஆகியோர் பேசினர்.  

கிளை நிர்வாகிகள் சீதாலட்சுமி, காயத்ரி, ஜேம்ஸ்,ரகு, சுதன் உள்பட பலர் பங்கேற்றனர்.

 மணல்மேடு

 மயிலாடுதுறை மாவட்டம், மணல்மேடு அரசு கலை-அறிவி யல் கல்லூரியில் நடைபெற்ற போராட்டத்தில் 700 க்கும் மேற்பட்ட மாணவ,மாணவிகள் பங்கேற்று முழக்கமிட்டனர். இதில் மாணவர் சங்கத்தின்  மாவட்ட தலைவர் அமுல்காஸ்ட் ரோ, மாவட்ட துணை தலைவர் பிரவீன்,  மாவட்டக்குழு உறுப்பி னர்கள் அன்புமணி, பகத்சிங், பிரவீன் அபிலாஷ் மற்றும் கிளை நிர்வாகிகள் பேசினர்.