districts

பள்ளிகளில் குழந்தைகள் தின கொண்டாட்டம்

புதுக்கோட்டை, நவ.14- புதுக்கோட்டை திருக்  கோகர்ணம் ஸ்ரீவெங்க டேஸ்வரா மெட்ரிக் மேல்  நிலைப்பள்ளி மாணவர்கள் கவிதைகள் எழுதி குழந்தை கள் தின விழாவைக் கொண்  டாடினர். குழந்தைகள் தினவிழா வை முன்னிட்டு திங்கள்கிழ மையை புத்தகம் இல்லா நாளாக புதுக்கோட்டை ஸ்ரீவெங்கடேஸ்வரா பள்ளி நிர்வாகம் அறிவித்தது. இத னைத் தொடர்ந்து புத்த கப்பை இல்லாமல் வந்த  மாணவர்களுக்கு இனிப்பும், ரோஜாப்பூவும் கொடுத்து பள்ளி ஆசிரியர்கள் வரவேற்  றனர். இந்தியாவின் முதல்  பிரதமர் நேருவின் படத்திற்கு பள்ளி மாணவ, மாணவிகள் மலர்கள் தூவி மரியாதை செலுத்தினர். தொடர்ந்து மாணவ, மாணவிகளின் ஆடல், பாடல் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதைத் தொடர்ந்து, தற்போது பெய்துவரும் மழை குறித்து மாணவர்கள் கவிதைகளை எழுதினர். கவிதை எழுதிய அனைவ ருக்கும் பள்ளி முதல்வர் கவி ஞர் தங்கம்மூர்த்தி பரிசுகளை வழங்கிப் பாராட்டினார்.
அறந்தாங்கி
புதுக்கோட்டை மாவட்  டம் மணமேல்குடி ஒன்றி யத்துக்கு உட்பட்ட அனைத்து பள்ளிகளிலும் குழந்தைகள் தின விழா நடைபெற்றது.  பிரதாபிராமன்பட்டினம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நடந்த குழந்தை கள் தின விழாவில் மணமேல்  குடி வட்டார கல்வி அலுவலர் செழியன் கலந்து கொண் டார். ஊராட்சி ஒன்றிய தொடக்  கப்பள்ளி ராம்நகரில் நடை பெற்ற குழந்தைகள் தின விழாவில் மணமேல்குடி வட்  டார கல்வி அலுவலர் இந்தி ராணி கலந்து கொண்டார். வடக்கூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் மண மேல்குடி வட்டார வளமைய மேற்பார்வையாளர் (பொ)  சிவயோகம் மாணவர்க ளுக்கு இனிப்புகள் வழங்கி னார். மேலும் ஆசிரியர் பயிற்றுநர்கள், சிறப்பாசி ரியர்கள் விழாவில், டிசம்பர் 3 உலக மாற்றுத்திறனாளி குழந்தைகள் தினத்தை கொண்டாடும் விதமாக சிறப்பு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.