புதுக்கோட்டை, ஜூலை 18 - ஆய்வுகளில் சிறந்து விளங்கிய மூத்த தொல்லியல் அறிஞர்களுக்கு ஞாயிறன்று புதுக்கோட்டையில் நடைபெற்ற தமிழகத் தொல்லியல் கழகத்தின் மாநில மாநாட்டில் விருதுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டனர். தமிழக தொல்லியல் கழகத்தின் மாநில பொதுக் குழுக்கூட்டம் மற்றும் கருத்தரங்கம் கடந்த சனி, ஞாயிறு ஆகிய இரண்டு தினங் கள் நடைபெற்றன. இரண்டாவது நாள் நடை பெற்ற நிகழ்வில் பேராசிரியர் எ.சுப்பராயலு உஷாதேவி பெயரில் மூத்த தொல்லி யல் அறிஞருக்கான விருது கரு.ராஜேந்திர னுக்கும், இளைய தொல்லியல் அறிஞருக் கான விருது ஆர்.பி.யதேஸ்குமாருக்கும் வழங்கப்பட்டன. மூத்த தொல்லியல் அறிஞருக்கான விருது ரூ.50 ஆயிரம் ரொக்கம், இளைய தொல்லியல் அறிஞருக்கான விருது ரூ.25 ஆயிரம் ரொக்கம் மற்றும் விருது நினைவுப் பரிசைக் கொண்டது. புதுக்கோட்டையைச் சேர்ந்த ஜெ.ராஜா முகம்மது, கரு.ராஜேந் திரன் ஆகியோருக்கு வாழ்நாள் சாதனை யாளர் விருதுகளும் வழங்கப்பட்டன. இந்த விருதுகளை வழங்கி, உயர் நீதிமன்ற வழக்குரைஞர் கணபதி சுப்பிரமணி யன் மாநாட்டு நிறைவுரையாற்றினார். முன்ன தாக நடைபெற்ற கருத்தரங்குகளில் கன்னடப் பல்கலைக்கழகத்தின் பேரா. சி.எஸ்.வாசு தேவன், தொல்லியல் கழகத்தின் நிறுவனர் எ.சுப்பராயலு, தலைவர் செந்தீ நடராசன், செயலர் சு.ராசவேலு, ஓய்வு பெற்ற தொல்லி யல் கண்காணிப்பாளர் பி.எஸ்.ஸ்ரீராமன், பேரா. அ.கா.பெருமாள் உள்ளிட்டோர் பல்வேறு தலைப்புகளில் பேசினர். மாநாட்டுக்கு மாநிலம் முழுவதும் இருந்தும் வந்திருந்த தொல்லியல் ஆய்வா ளர்கள் ஞாயிற்றுக்கிழமை காலை கலசக் காடு, திருக்கட்டளை, பொற்பனைக் கோட்டை ஆகிய இடங்களை பார்வையிட்ட னர். மாலையுடன் மாநாடு நிறைவடைந்தது.