புதுக்கோட்டை, ஜன.7 - வேங்கைவயல் சம்பவத்தில் உண்மை அறியும் பரிசோதனைக்கு அனுமதி கோரும் சிபிசிஐடி போலீசாரின் மனு மீதான விசார ணை 2024 ஜன.9 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் வேங்கை வயலில் பட்டியலின மக்கள் பயன்படுத்தும் குடிநீர்த் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக தற்போது விசாரணை நடத்தி வரும் சிபிசிஐடி போலீ சார், சந்தேகத்துக்குரிய 10 பேரிடம் உண்மை அறியும் பரிசோதனை நடத்த முடிவு செய்த னர். இதற்கான அனுமதி கோரி மாவட்ட எஸ்.சி, எஸ்.டி வன்கொடுமைத் தடுப்புச் சட்ட சிறப்பு நீதிமன்றத்தில் மனு அளித்திருந்தனர்.
உண்மை அறியும் சோதனை தொடர்பாக விரிவான தகவல் களுடன் மனு செய்ய நீதிபதி அறிவுறுத்தி யிருந்தார். இதனைத் தொடர்ந்து சிபிசிஐடி துணைக் காவல் கண்காணிப்பாளர் பால்பாண்டி மருத்துவ விடுப்பில் இருந்ததால், 3 முறை இந்த விசாரணை ஒத்திவைக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், சனிக்கிழமை இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. டிஎஸ்பி பால்பாண்டி ஆஜராகி, உண்மை அறியும் சோத னை தொடர்பான விரிவான அறிக்கையைத் தாக்கல் செய்தார். இந்த அறிக்கையின் நகல் களை தொடர்புடைய 10 பேருக்கும் வழங்கி, அவர்களின் கருத்தை அறியும் வகையில் வழக்கை, ஜன.9 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி எஸ்.ஜெயந்தி உத்தரவிட்டார்.