புதுக்கோட்டை, ஏப்.4- புதுக்கோட்டை மாவட் டம் மணமேல்குடி அருகே கோடியக்கரையில் செவ்வாய் கிழமை கரை ஒதுங்கிய இலங்கை பைபர் படகு குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வரு கின்றனர். கோடியக்கரை கடல் பகுதியில் இருந்து ஏராள மான மீனவர்கள் நாட்டுப் படகு மூலம் கடலில் மீன் பிடித் தொழில் செய்து வரு கின்றனர். இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை காலை இலங்கைப் பதிவெண் கொண்ட பைபர் படகு ஒன்று நாட்டுப்படகு மீன்பிடி இறங்கு தளத்தின் கரையோ ரத்தில் நிறுத்தி வைக்கப் பட்டிருந்தது. இது குறித்து கடலோ ரக் காவல் படையினருக்கு மீனவர்கள் தகவல் தெரி வித்தனர். இதையடுத்து, மணமேல்குடி கடலோரக் காவல் படையினர் இலங்கை படகை கைப்பற்றி விசாரணை நடத்தி வரு கின்றனர். இது குறித்து காவல் துறையினர் கூறுகையில், கரை ஒதுங்கியுள்ள இலங்கைப் பதிவெண் கொண்ட பைபர் படகில் மோட்டார் பொருத்தப் பட்டுள்ளது. மேலும் இரண்டு டீசல் கேன்கள் உள்ளன. படகு பழுதாகி, கடலில் மிதந்து கரை ஒதுங்காமல், இயங்கும் நிலையில்தான் இந்தப் பைபர் படகு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஆட்கள் யாரும் இல்லை. இங்கிருந்தோ, இலங்கையி லிருந்தோ பொருட்களை கடத்திச் செல்வதற்காக இப்படகு பயன்படுத்தப் பட்டிருக்கலாம் என கருது கிறோம் என்றனர்.