சென்னை, ஜன. 31 - பழனி முருகன் கோவில் வழிபாடு உரிமை தொடர்பான வழக்கில், மத நல்லிணக்கம், மக்கள் ஒற்றுமையை பாதிக்கும் வகையில் வழங்கப்பட்டுள்ள தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக, கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் தனது அறிக்கையில் குறிப்பிட்டிருப்பதாவது: பழனி முருகன் கோவிலுக்குள், இதர மதத்தினரை அனுமதிக்கக் கூடாது என்று, ஒரு அரசியல் கட்சி பிர முகர் தொடர்ந்த வழக்கில், பழனி முரு கன் கோவில் மட்டுமின்றி தமிழ்நாடு முழுவதும் உள்ள இந்து கோவில்கள் அனைத்திற்கும் பொருந்துமாறு ஒரு தீர்ப்பை, சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையின் மாண்புமிகு நீதிபதி ஸ்ரீமதி வழங்கியுள்ளார்.
அதில், “இந்துக்கள் அல்லாதவர் கள் கோவில் கொடி மரத்திற்கு அப்பால் அனுமதிக்கப்பட மாட்டார் கள்” என கொடி மரத்திற்கு அருகிலும், இதர முக்கியமான இடங்களிலும் என அறநிலையத்துறை விளம்பரப் பல கை வைக்க வேண்டுமென்றும், இந்துக் கள் அல்லாதோரை கோவிலுக்குள் அனுமதிக்கக் கூடாது என்றும், இந்துக் கள் அல்லாத யாரும் ஏதாவது ஒரு கோவிலுக்குள் செல்லவிரும்பினால், அவர்கள் இந்து மதத்தின் நடைமுறை களையும், பழக்க வழக்கங்களையும் பின்பற்றுவதாகவும், குறிப்பிட்ட கட வுளின் மீது நம்பிக்கை இருக்கிறது என்றும் உறுதிமொழி அளித்தால் மட்டுமே உள்ளே செல்ல அனுமதிக்கப் படலாம் என்றும், அப்படி அனுமதிக்கப் படும் இந்துக்கள் அல்லாதோர் குறித்த பட்டியலை பதிவேடுகளில் பராமரிக்க வேண்டுமென்றும் தீர்ப்பளித்துள்ளார்.
மேலும், இந்த தீர்ப்பு பழனி தண்டா யுதபாணி சுவாமி கோவிலுக்கு மட்டு மின்றி, தமிழகம் முழுவதும் உள்ள அறநிலையத்துறை கோவில்கள் அனைத்திற்கும் பொருந்தும் என்றும் தீர்ப்பளித்துள்ளார். இந்த தீர்ப்பு இறை நம்பிக்கை யுள்ளவர்களை காயப்படுத்தும் தீர்ப்பாகும். தமிழகத்தில் ஒரே நேரத்தில் எல்லா மதவழிபாட்டுத் தலங் களுக்கு சென்று வரும் வழக்கம் பல் வேறு பகுதி மக்களிடமும் நடை முறையில் உள்ளது. மதம் கடந்து இறை வழிபாடு செய்கிற மக்கள் ஏராள மாக உள்ளனர்.
அதேசமயம், பல்வேறு சமூக நிர்ப்பந்தங்கள் காரணமாகவும் பிறப் பின் அடிப்படையிலும் தங்களை ஒரு மதத்தைச் சார்ந்தவர் என்று வெளிப் படுத்திக் கொள்வதும் நடைமுறை யில் உள்ளது. இந்து மதத்திற்கு உள் ளேயும் சைவம், வைணவம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளும், வைணவத்திற் குள்ளும் வடகலை, தென்கலை போன்ற பிரிவுகளும் அதன் காரண மாக முரண்பாடுகளும், மோதல் களும் இருக்கிறது. நாளையே ஒருவர், ‘இது சைவக் கோவில், வைணவர்கள் வரக்கூடாது’ என்றோ, ‘இது வைணவ கோவில்; எனவே, சைவர்கள் வரக்கூடாது’ என்றோ நீதிமன்றத்தை நாடலாம்.
வைணவர் ஒருவர் வடகலைக்கு ஆதர வாகவோ, தென்கலைக்கு ஆதர வாகவோ, ‘இதர கலையை பின்பற்று பவர் குறிப்பிட்ட கோவிலுக்குள் வரக் கூடாது, வரமுடியாது’ என்றோ நீதி மன்றத்தை நாட வாய்ப்புள்ளது. இது வெல்லாம் இந்து மதத்தின் பல்வேறு பிரிவினர்களிடையே முரண்பாட்டை யும், பகைமையையும் உருவாக்கு வதற்கான அடிப்படையாக அமைந்து விடும் வாய்ப்புள்ளது. அதற்கு இந்த தீர்ப்பே தீனிபோடும் விதமாக அமைந்துவிடும். மேலும், தஞ்சை பிரகதீஸ்வரர் கோவிலில் கொடிமரத்திற்கு அப்பால் போக முடியாது என்றும் வேறு சில கோவில்களிலும் அப்படி இருப்பதாக வும் தீர்ப்பில் சொல்லப்பட்டிருப்பது உண்மைக்கு மாறானதாக உள்ளது.
பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப் பட்ட பிறகு, அதில் இதுபோன்ற கட்டுப் பாடுகள் இருப்பதற்கு வாய்ப்பில்லை. இன்றுவரையிலும் தஞ்சை பிரகதீஸ் வரர் கோவிலில் எல்லா பக்தர்களும் எந்த இடம் வரை செல்ல முடியுமோ அந்த இடம் வரை செல்வதற்கு அனைத்து மதத்தினருக்கும் அனுமதி அளிக்கப்பட்டே வருகிறது. தொல்லி யல் துறையின் கட்டுப்பாட்டில் வராத பெரியநாயகி அம்மன் கோவிலுக்கு மட்டுமே அதுவும் உடை கட்டுப்பாடு மட்டுமே அமலில் உள்ளது. தீர்ப்பில் தஞ்சை பிரகதீஸ்வரர் கோவில் குறித்த இந்த அம்சம் உண்மைக்கும் மாறாக இருக்கிறது. இந்து மதக் கோவில்களில் வர லாற்றுக் காலம் தொட்டு அனைத்து மதத்தைச் சார்ந்தவர்களும் செல்வதற்கு நடைமுறை உள்ளது.
இப்போது ஏன் இந்த கட்டுப்பாடு என்ற கேள்விக்கு நியாயமான பதில் இல்லை. பிற மதங்களை சார்ந்த ஆல யங்களில் அனைத்து மதத்தினரும் சென்று வழிபடுவது காலம் காலமாக நடைபெற்று வரும் நிலையில் இந்த கட்டுப்பாடு மக்கள் ஒற்றுமையை பெரிதும் பாதிக்கக் கூடியதாக அமைந்து விடும். எனவே, மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் மக்களிடம் பகைமை உணர்வை விதைக்கும் வகையிலான இந்த தீர்ப்பு மறுபரிசீலனைக்கு உட் படுத்தப்பட வேண்டும். அரசியல் நோக்கத்திற்காக தொடுக்கப்பட்ட ஒரு வழக்கில் தன்னை அறியாமல் நீதி மன்றமும் துணை போயிருக்கிறதோ என்கிற சந்தேகம் எழுகிறது.
இவற்றையெல்லாம் கணக்கில் கொண்டு உயர்நீதிமன்றம் இந்த தீர்ப்பை மறுபரிசீலனைக்கு உட்படு த்த வேண்டுமென்றும், அதுவரை யிலும் தீர்ப்பை நிறுத்தி வைக்க வேண்டுமெனவும் இந்து சமய அறநிலையத்துறை இந்த வழக்கில் உடனடியாக மேல்முறையீடு செய்ய வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வலியுறுத்துகிறது. இவ்வாறு கே. பாலகிருஷ்ணன் குறிப்பிட்டுள்ளார்.