districts

சிறுத்தை உயிரிழப்பு  - வனத்துறையினர் விசாரணை  

நீலகிரி, ஆக.5- மஞ்சூர் அருகே வனப்பகுதியில் இறந்து கிடந்த சிறுத்தை குறித்து வனத்துறையினர் விசாரித்து வருகின்றனர். நீலகிரி மாவட்டம், மஞ்சூர் அருகே சிவசக்தி நகர் அரு கில் உள்ள காப்புக்காட்டில் சிறுத்தை இறந்து கிடப்பதாக வனத்துறையினருக்கு கிடைத்த தகவலின் பேரில், வனவர் ரவி தலைமையிலான வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று சிறுத்தையின் உடலை மீட்டு விசாரணை நடத்தி னர். பின்னர் இந்த சம்பவம் குறித்து உயர் அதிகாரிகளுக்கு தக வல் கொடுத்ததையடுத்து, மாவட்ட வன அலுவலர் குரு சாமி, கால்நடை மருத்துவர்கள் சம்பவ இடத்திற்கு வந்த னர்.

தொடர்ந்து கால்நடை மருத்துவர்கள் சிறுத்தையின் உடலை பிரேத பரிசோதனை செய்து அங்கேயே உடல் தக னம் செய்யப்பட்டது. இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறுகையில்,  இறந்த சிறுத்தைக்கு 10 வயது இருக்கும். சிறுத்தை நோய்வாய்ப் பட்டு இறந்து போனதா அல்லது வனவிலங்குகளுடன் ஏற்பட்ட மோதலில் காயமடைந்து இறந்ததா? என்பது குறித்து பிரேத பரிசோதனை அறிக்கைக்கு பின்னரே தெரியவரும், என்ற னர்.

;