districts

img

கிருமி நாசினி தெளிக்கும் பணியில் வாலிபர் சங்கத்தினர்

திருச்செங்கோடு, மே 18-

திருச்செங்கோடு ஒன்றிய பகுதியில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் கிருமி நாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்டனர்.  நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு ஒன்றியம், ஆனங்கூர் ஊராட்சிக்குட்பட்ட  நல்லா கவுண்டம்பாளையம் பகத்சிங் நகரில் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக இந்திய  ஜனநாயக வாலிபர் சங்க நல்லா கவுண்டம்பாளையம் கிளையின் சார்பில்  திங்களன்று மணிக்கு கிளை தலைவர் ஜெக நாதன் தலைமையில் கிருமிநாசினி தெளிக் கும் பணியில் ஈடுபட்டனர்.

மேலும், நல்லா  கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள அனைத்து வீதிகளுக்கும் மற்றும் மாரியம் மன் கோவில், காளியம்மன் கோவில் பகுதி யிலும், கிருமி நாசினி தெளிக்கபட்டது. இதில், வாலிபர் சங்க திருச்செங்கோடு தலைவர் ஜி. கோபி கலந்து கொண்டார்.  வாலி பர் சங்கத்தின் சக்திவேல், உதயகுமார், கார்த்தி, பிரகாஷ், மனோஜ், நவீன், ஜீவா, சஞ்சய், விக்னேஷ், தரணி ஆகியோர் கிருமி நாசினி தெளிப்பு பணியில் ஈடுபட்டனர்.

;