districts

img

மக்களவை தேர்தல் களம்

நாமக்கல், மார்ச் 26-
தேர்தல் விதிமுறைகளை மீறிய நாமக்கல் மக்களவை தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் தமிழ்மணி மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத் துள்ளனர்.

தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக ஏப்.19 ஆம் தேதி மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. நாமக் கல் மக்களவை தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில், கொங்குநாடு மக் கள் தேசிய கட்சி மாதேஸ்வரன் என்ப வர் போட்டியிடுகிறார். அதிமுக சார் பில் தமிழ்மணி என்பவர் போட்டியிடு கிறார். மேலும், களத்தில் நாம் தமிழர், பாஜக, சுயேச்சை வேட்பாளர்கள் என  ஏராளமானோர் உள்ள நிலையில் தேர்தல் நடத்தை விதிமுறைகளின் படி அரசியல் கட்சிகளின் கொடிக்கம்பங் கள், பேனர், பிளக்ஸ் போர்டுகள் இருக் கக்கூடாது என்பது விதியாக உள்ளது. இந்நிலையில், நாமக்கல் மக்களவை தொகுதிக்குட்பட்ட திருச்செங்கோடு சுற்றுவட்டார பகுதிகளில் அதிமுக வேட்பாளர் தமிழ்மணியின் படத்தை மட்டும் போட்டு சுவரொட்டிகள் ஒட் டப்பட்டுள்ளது. மேலும், அதிமுக வேட் பாளர் தமிழ்மணிக்கு பரமத்தியில் சொந்தமாக சமையல் எண்ணை தயா ரிப்பு நிறுவனம் இருப்பதாக கூறப் படுகிறது. அவ்வாறு அவருடைய தயாரிப்பு நிறுவனத்தின் பெயரை விளம்பரப்படுத்துவதைப் போல அவ ருடைய புகைப்படத்தை போட்டு  பெயர் விவரம் ஏதும் இல்லாமல் பல் வேறு பகுதிகளில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது.

தேர்தல் நடத்தை விதிமுறைக ளுக்கு மாறாக ஒட்டப்பட்டுள்ள இந்த போஸ்டர்கள் குறித்து தேர்தல் ஆணை யம் உரிய நடவடிக்கை எடுக்க வேண் டும் என சமூக ஆர்வலர்கள், மாற்றுக்  கட்சியைச் சேர்ந்தவர்கள் ஆங் காங்கே ஒட்டப்பட்டுள்ள புகைப்படங் களை ஆதாரமாக எடுத்து சமூக வலை தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.