districts

img

மடிக்கணினி கேட்டு எஸ்எப்ஐ ஆர்ப்பாட்டம்

நாமக்கல்.ஜன.20- அரசு பள்ளி மாணவர்களுக்கு மடிக் கணிணி வழங்க்ககோரி இந்திய மாண வர் சங்கத்தினர் நாமக்கல் மாவட்ட ஆட்சி யர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத் தில் ஈடுபட்டனர். அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்க ளின் உயர்கல்விக்கு பயன்பெரும் வகை யில் தமிழக அரசு சார்பில் இலவச மடிக் கணினித் திட்டத்தின் மூலம் மடிக் கணினி வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், 2017-18 கல்வியாண்டில் பயின்ற மாணவர்களுக்கு 3 ஆண்டுக ளுக்கு மேலாகியும் மடிக்கணினி வழங்கப்படவில்லை.

எனவே, அரசு பள்ளி மாணவர்களுக்கு மடிக்கணி னியை உடனடியாக வழங்க வேண்டும் என வலியுறுத்தி நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இந்திய மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாநிலத் தலைவர் ஏ.டி.கண்ணன் தலைமை வகித்தார். இதில், மாவட் டச் செயலாளர் தே.சரவணன், மாவட் டக்குழு உறுப்பினர் ஆர்த்தி, தங்கராஜ், கோபி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு கோரிக்கை முழக்கங்களை எழுப்பி னர்.

;