districts

தமிழ் வளர்ச்சித்துறை மூலம் தமிழ்ச் செம்மல் விருது வழங்கல்

நாமக்கல், ஜன.24- தமிழக அரசு தமிழ் வளர்ச்சித்துறையின் மூலம் 2019 ஆம் ஆண்டிற்கான தமிழ்ச் செம்மல் விருதிற்கான தேர்வு செய்யப்பட்ட ப.சுப்பண்ணன் என்பவருக்கு நாமக்கல் மாவட்ட ஆட்சியர் கா.மெகராஜ் விருது வழங்கினார்.

தமிழ்நாட்டில் தமிழ் வளர்ச்சிக்காக அரும்பாடுபடும் ஆர்வலர்களுக்கு அவர்களின் தமிழ் தொண்டினை பெரு மைப்படுத்தி ஊக்கப்படுத்தும் வகையில் தமிழ்ச் செம்மல் விருது வழங்கப்பட்டு வருகிறது. நாமக்கல் மாவட்டத்தில் 2019 ஆம் ஆண்டிற்கான தமிழ்ச் செம்மல் விருதிற்கு ப. சுப்பண்ணன் என்பவர் தேர்வு செய்யப்பட்டார்.

அதன்படி அண்மையில் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத் தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் கா.மெக ராஜ், சுப்பண்ணனுக்கு தமிழ்ச் செம்மல் விருதை வழங்கி னார். இந்நிகழ்ச்சியில், தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் வே. ஜோதி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சி.சீனிவாசன் ஆகியோர் உடனிருந்தனர்.

;