districts

img

தியாகிகள் தினம் அனுசரிப்பு

நாமக்கல், ஜன.19- இந்திய தொழிற்சங்க மையம் சார்பில் தியாகிகள் தினம் செவ்வாயன்று நாமக்கல், சேலம், கோவை உள்ளிட்ட பல்வேறு பகுதி களில் அனுசரிக்கப்பட்டது. இந்திய தொழிற்சங்க மைய (சிஐடியு) நிர்வாகிளான நாகூரான், அஞ்சான், ஞான சேகரன் ஆகியோர் நினைவு தினமான ஜன.19 ஆம் தேதியன்று தியாகிகள் தின மாக தமிழகம் முழுவதும் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதன் ஒருபகுதியாக சிஐடியு நாமக்கல் மாவட்ட அலுவலகத்தில் நடை பெற்ற நிகழ்விற்கு சிஐடியு மாவட்டத் துணைத் தலைவர் எம்.அசோகன் தலைமை வகித்தார். இதில், சிஐடியு மாவட்டச் செய லாளர் ந.வேலுசாமி, மாவட்டத் துணைச் செயலாளர் கு.சிவராஜ், விவசாய சங்க முன்னாள் மாநில செயலாளர் ஏ.ரங்கசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர். டாஸ்மாக் குடோன் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வில் மாவட்டக்குழு உறுப்பினர் பெருமாள், முனியப்பன், செந் தில் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

சேலம்

சேலம் ரயில்வே ஏற்றுமதி, இறக்குமதி தொழிலாளர் சங்கத்தின் (சிஐடியு) சார்பில் சேலம் மார்க்கெட் கூட்செட் கேட் முன்பு தியாகிகள் தின கொடியேற்று விழா சங்கத் தின் உதவி தலைவர் பி.மதியழகன் தலை மையில் நடைபெற்றது. இதில், சங்கத் தலைவர்  ஆர்.வெங்கடபதி, நிர்வாகிகள் பிரபு, முருகன், சுந்தர், சரவணனன் 300க்கும் மேற்பட்ட சுமைத் தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

கோவை

கோவை காய்கடை மைதானத்தில் சிஐ டியு சார்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு சங்கத்தின் மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.ஆறுமுகம் தலைமை வகித்தார். இதில், சிஐடியு மாவட்டத் தலைவர் சி.பத்மநாபன், செயலாளர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி, பொரு ளாளர் ஆர்.வேலுசாமி, விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் வி்ஆர்.பழனிச்சாமி, விவசாய தொழிலாளர் சங்கத்தின் முன் னாள் செயலாளர் என்.வி.தாமோதரன் உள் ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

;