districts

சூறைக்காற்றுடன் கனமழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு

நாமக்கல், ஜூன் 8- நாமக்கல்லில் சூறைக்காற்றுடன் வியாழனன்று கனமழை பெய்தது. இத னால் சாலையோர மரங்கள் முறிந்தும், மழையால் வெள்ளம் பெருக்கெடுத்தால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை  பாதிக்கப்பட்டது.

நாமக்கல் மாவட்டத்தில் கத்திரி  வெயில் காலக்கட்டத்தில் கோடை மழை பரவலாக பெய்தது. இதனால்  வெயிலின் பிடியில் சிக்கி தத்தளித்த  மக்கள், குளிர்ச்சியான சீதோஷ்ண  நிலையைக் கண்டு நிம்மதியடைந்தனர். அதன்பிறகு வெயிலின் தாக்கம் குறைந் தாலும், புழுக்கம் அதிகமாகவே காணப் பட்டது. அவ்வப்போது லேசான மழை பெய்து வந்தது. இந்த நிலையில் வியா ழனன்று பிற்பகல் 5 மணிக்கு மேல் நாமக்கல் சுற்றுவட்டார பகுதிகளில் வானம் இருண்டு, சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது. இதனால், சாலை களில் மழைநீர் வெள்ளம்போல பெருக் கெடுத்து ஓடியது.

ஆங்காங்கே சாலைகளில் மரங்கள் முறிந்து விழுந்தன. நாமக்கல்-சேலம் சாலையில் விழுந்த மரங்களால் போக் குவரத்துப் பாதிக்கப்பட்டது. நெடுஞ் சாலைத் துறையினர் அவற்றை அகற் றும் பணியை மேற்கொண்டனர். பாது காப்பு கருதி மின்தடை ஏற்படுத்தப்பட் டது. நாமக்கல் மட்டுமின்றி மாவட்டத் தின் பல்வேறு இடங்களில் மழை வெளுத்து வாங்கியது. இதனால் மக்க ளின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப் பட்டது.