அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்களை அரசு ஊழியராக்கி காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி நாமக்கல் வெண்ணந்தூர் குழந்தைகள் நல வட்டார அலுவலகம் முன்பு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில், சங்கத்தின் மாவட்டத் தலைவர் கே.ஜெயமணி, மாவட்டச் செயலாளர் எல்.ஜெயக்கொடி, சிஐடியு மாவட்டச் செயலாளர் ந.வேலுச்சாமி, கூட்டுறவு சங்க தலைவர் எம்.ரங்க சாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இதேபோல், நாமக்கல் பூங்கா சாலை முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அங்கன்வாடி ஊழியர் சங்க மாவட்டப் பொருளா ளர் எம்.பூங்கொடி, மாவட்ட இணைச் செயலாளர்கள் பி.கலா, இ.பிரேமா, அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் ஆர்.முருகேசன். சிஐடியு மாவட்ட உதவிச் செயலாளர் கு.சிவராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.