நாகர்கோவில், ஜன.27- கன்னியாகுமரி மாவட்டத்தில் 2956 மாற்றுத்திறன் குழந்தைகள் உள்ளனர். இந்த மாற்றுத்திறன் குழந்தைகள் அனைவருக்கும் கல்வி வழங்குவதற்கு தமிழக அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இயலா குழந்தைகள் பள்ளிக்கு வருவதில் ஏற்படும் சிரமங்களை தவிர்ப்பதிலிருந்து அவர்கள் கற்கும் திறன் அதிகரிக்க பல்வேறு ஆக்க பூர்வமான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறைவான பாதிப்பினை உடைய மாற்றுத்திறன் குழந்தைகள் முறையான பள்ளிகளில் சேர்க்கப்பட்டு சிறப்பு பயிற்சி கொடுக்கப்பட்டு வருகிறது. இன்னும் அதிகமான பாதிப்பினை உடைய மாற்றுத்திறன் குழந்தைகளைப் பராமரிப்பதற்கு போதிய வசதி யில்லாததாலும், குடும்ப சூழ்நிலையாலும் பெற்றோர்கள் கவலைப்பட்டுக் கொண்டி ருப்பதை கருத்தில் கொண்டு ஒருங்கி ணைந்த பள்ளிக் கல்வி சார்பில் உள்ள டக்கிய கல்வி மையங்கள் ஏற்படுத்தப் பட்டுள்ளன. மிகவும் கடுமையாக பாதிக் கப்பட்ட மாற்றுதிறன் கொண்ட குழந்தை களுக்கு பயிற்சியும், சிகிச்சையும் தருவ தற்கு அவர்களின் வீடுகளுக்கே சிறப்பா சிரியர்கள் மற்றும் இயன்முறை மருத்து வர்கள் சென்று வருகின்றனர்.
வீட்டு மட்டத்தில் பயிற்சி பெறும் 262 குழந்தைகளின் உடல் நலம், மனநலம், அறிவு வளர்ச்சி போன்றவை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு மதிப்பீடு செய் யப்பட்டு வருகிறது. குமரி மாவட்டத்தில் உள்ள 18 வயதிற்குட்பட்ட மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு முறையான மதிப்பீடு செய்து அவர்களுக்கு தேவையான உதவி உபகரணங்கள் வழங்க தேர்வு செய்தல், தேசிய அடையாள அட்டைகள் வழங்குதல், தனித்துவ அடையாள அட்டை வழங்குதல், பேருந்து, ரெயில் பயண அட்டை வழங்குதல், அடையாள அட்டை புதுப்பித்தல், மருத்துவ உதவிகள் மற்றும் சிறப்புத் தேவைகளை கண்டறிதல் மற்றும் மத்திய, மாநில அரசுகளின் கல்வி உதவித் தொகை பெறுதல் மற்றும் அறுவை சிகிச்சை தேவைப்படும் பய னாளிகளை கண்டறிந்து அறுவை சிகிச்சைக்கு பரிந்துரை செய்யப்படும். வட்டார மையம் வாரியாக ராஜாக்க மங்கலத்தில் 31-ஆம் தேதி ராஜாக்க மங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளி, தக்க லைக்கு பிப்ரவரி 1-ஆம் தேதி தக்கலை அரசு மேல்நிலைப் பள்ளி, மேல்புறத்திற்கு 3-ஆம் தேதி மேல்புறம் அரசு உயர் நிலைப் பள்ளி, அகஸ்தீஸ்வரத்திற்கு 7-ஆம் தேதி நாகர்கோவில் எஸ்.எல்.பி. அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளி, திரு வட்டாருக்கு 10-ஆம் தேதி திருவட்டார் அரசு உயர் நிலைப் பள்ளி, தோவா ளைக்கு 14-ஆம் தேதி இறச்சகுளம் அரசு உயர்நிலைப் பள்ளி, கிள்ளியூருக்கு 15-ஆம் தேதி கருங்கல் அரசு மேல் நிலைப்பள்ளி, முஞ்சிறைக்கு, 17-ஆம் தேதி முன்சிறை அரசு மேல்நிலைப்பள்ளி, குருந்தன்கோடுக்கு பிப்ரவரி 21-ஆம் தேதி கடியப்பட்டணம் இருப்பு மணவா ளக்குறிச்சி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி ஆகிய இடங்களில் முகாம்கள் நடை பெறுகிறது. இந்த மருத்துவ முகாம்களை சுகாதாரத் துறை, மாவட்ட மாற்றுத் திறனா ளிகள் நல அலுவலகம் மற்றும் ஒருங்கி ணைந்த பள்ளிக் கல்வி இணைந்து நடத்த உள்ளன.