districts

img

நாகைமாலி எம்எல்ஏவிடம் ஜாக்டோ-ஜியோ கோரிக்கை மனு அளிப்பு

நாகப்பட்டினம், ஏப்.7-  புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்தல், ஊதிய முரண்பாடுகளை கலை தல், தொகுப்பூதியம், மதிப்பூதியம், ஒப்பந்த நியமனம் உள்ளிட்டவற்றை ரத்து  செய்து முறையான ஊதிய விகிதம் வழங்கு தல், காலிப் பணியிடங்களை முறையான ஊதிய விகிதத்தில் நிரப்புதல், சத்துணவு ஊழி யர்களுக்கு ஊதியக் குழுவில் வரையறுக் கப்பட்ட ஊதியம் மற்றும் ஓய்வூதியம் வழங்கு தல் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற  வலியுறுத்தி ஏப்ரல் 11 அன்று ஜாக்டோ-ஜியோ சார்பில் கோட்டையை முற்றுகையிடும் போராட்டம் நடைபெறவுள்ளது. இதனையொட்டி சட்டமன்றத்தில் முதல மைச்சரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்கள் கோரிக் கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி குரல்  கொடுத்து உதவ வேண்டும் என்று கீழ்வே ளூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் வி.பி.நாகைமாலியை சந்தித்து நாகை மாவட்ட ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்பாளர் அ.தி. அன்பழகன் தலைமையில் மனு அளித்த னர்.  நிகழ்வில் உயர்மட்டக் குழு உறுப்பினர் கள் ப.அந்துவன்சேரல், பா.ராணி, தமிழ்நாடு  தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்டச் செயலாளர் பால சண்முகம், தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி நிர்வாகி ஞானராஜ் மற்றும் பட்டதாரி ஆசி ரியர் சங்க நிர்வாகி ஜி.கே.இராஜன் ஆகி யோர்  கோரிக்கை மனு அளிக்கும் நிகழ்வில்  கலந்து கொண்டனர்.