கோவை, நவ.7– உழைக்கும் வர்க்கம் உலகை ஆள முடியும் என்கிற நம்பிக்கையை ஏற்படுத்திய நவம்பர் புரட்சிதின கொடியேற்று விழா உல கெங்கும் கொண்டாடப்படுகிறது. இதன்ஒரு பகுதியாக இந்தியாவில், தமிழகத்தில் சோச லிசமே மாற்று மற்றெதெல்லாம் ஏமாற்று என் கிற முழக்கத்தோடு எழுச்சியோடு கொண்டா டப்பட்டது. சாதி, மதவெறி சக்திகளை தனிமைப் படுத்துவோம், மார்க்சிஸ்ட் கட்சியை வலுப் படுத்துவோம், முன்னேறுவோம் என்கிற உறுதிமொழியோடு நவம்பர் புரட்சிதின செங்கொடியேற்ற நிகழ்வு நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கட்சியின் கோவை மாவட்டக் குழு அலுவலகம் முன்பு நடைபெற்ற நவம்பர் புரட்சி தின கொடியேற்று விழாவிற்கு மாவட்ட கட்சி அலுவலக கிளை செயலாளர் ஆனந்தன் தலைமை தாங்கினார். நவம்பர் புரட்சி தின செங்கொடியை அலுவலக செயலாளர் ராம சுப்பு ஏற்றிவைத்தார். நவம்பர் புரட்சியின் சிறப்புகள் குறித்து சிபிஎம் கோவை நாடா ளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் உரை யாற்றினார். இதில், கட்சியின் மாவட்ட செயற் குழு உறுப்பினர்கள் யு.கே.சிவஞானம், என். ஆர்.முருகேசன் மற்றும் ஜெயபாலன் உள் ளிட்ட திரளானோர் பங்கேற்றனர். இதேபோன்று மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நவம்பர் புரட்சிதின கொடியேற்று விழா எழுச்சியோடு நடைபெற்றது. இதில், கட்சியின் மாவட்ட செயலாளர் சி.பத்மநாபன் உள்ளிட்ட மாவட்ட செயற்குழு, மாவட்டக் குழு உறுப்பினர்கள் திரளானோர் பங்கேற்ற னர்.
ஈரோடு
நவம்பர் புரட்சி தின கொடியேற்று விழா மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஈரோடு மாவட்டக்குழு அலுவலகத்தில் நடைபெற் றது. மாவட்ட செயற்குழு உறுப்பினர் சி.பரம சிவம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ் வில் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் பி. சண்முகம் செங்கொடி ஏற்றி வைத்தார். இதேபோன்று ஈரோடு மாவட்டக்குழு அலு வலகம் அருகே நடைபெற்ற நவம்பர் புரட்சி தின நிகழ்வு மாவட்ட செயற்குழு உறுப்பி னர் ஆர்.விஜயராகவன் தலைமையில் நடை பெற்றது. இதில், மாநிலக்குழு உறுப்பினர் ஏ.ராதிகா கொடியேற்றினார். இந்நிகழ்வில், மாவட்ட செயலாளர் ஆர்.ரகுராமன், செயற் குழு உறுப்பினர் ஆர்.கோமதி உள்ளிட்ட மாவட்டக்குழு உறுப்பினர்கள் திரளானோர் பங்கேற்றனர். முடிவில், நகர செயலாளர் பி.சுந்தரராஜன் நன்றி கூறினார்.
சேலம்
சேலம் சிறை தியாகிகள் நினைவக வளா கத்தில் அமைந்துள்ள மாமேதை காரல் மார்க் சிலைக்கு மாலை அணிவித்து செங்கொடி ஏற்றப்பட்டது. சேலம் சிறை தியாகிகள் நினை வக வளாகத்தில் உள்ள காரல் மார்க் சிலைக்கு மூத்த தோழர் ரத்தினம் மாலை அணிவித்தார். அதனை தொடர்ந்து மாநில செயற்குழு உறுப்பினர் பி.செல்வசிங் நவம் பர் புரட்சி தின செங்கொடியை ஏற்றி வைத்து சிறப்புரை ஆற்றினார். அலுவலக செயலாளர் பி.சந்திரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச் சியில் மாவட்ட செயலாளர் மேவை. சண்முக ராஜா, மேற்கு மாநகர செயலாளர் எம்.கனக ராஜ், வடக்கு மாநகர செயலாளர் என். பிர வீன் குமார், சேலம் தாலுக்கா குழு செயலா ளர் கே.எஸ். பழனிசாமி மற்றும் மாவட்ட குழு உறுப்பினர்கள் திரளானோர் பங்கேற்றனர்.
தருமபுரி
நவம்பர் புரட்சி தினத்தை முன்னிட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தரும புரி செங்கொடிபுரத்தில் உள்ள மாவட்டக் குழு அலுவலகத்தில் கொடியேற்று விழா நடைபெற்றது. நகர செயலாளர் ஆர்.ஜோதி பாசு தலைமை வகித்தார். கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் பி.டில்லிபாபு கொடியேற்றி வைத்தார். இதில், மாவட்ட செயற்குழு உறுப் பினர் எஸ்.கிரைஸாமேரி மற்றும் மாவட்டக் குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர். இதேபோன்று மாவட்டம் முழுவதும் நவம் பர் புரட்சி தினம் கொண்டாடப்பட்டது.
தீக்கதிர்
இதேபோன்று நவம்பர் புரட்சிதின விழா மற்றும் செங்கொடியேற்றும் நிகழ்வு தீக்கதிர் கோவை பதிப்பில் நடைபெற்றது. ஆசிரியர் குழு கட்சிக்கிளை செயலாளர் மனோஜ் தலைமை தாங்கினார். புரட்சிதின கொடியை விளம்பர மேலாளர் கே.அழகப்பன் ஏற்றி வைத்தார். நவம்பர் புரட்சியின் தாக்கங்கள் குறித்து கோவை பதிப்பு பொது மேலாளர் எஸ்.ஏ.மாணிக்கம் உரையாற்றினார். இதில், விநியோக மேலாளர் நெல்சன் பாபு உள்ளிட்ட தீக்கதிர் ஊழியர்கள் திரளானோர் பங்கேற்ற னர்.