நாகப்பட்டினம், டிச.27- நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் சட்டமன் றத்திற்கு உட்பட்ட திருப் பூண்டி கிழக்கு (காமேஸ் வரம்) ஊராட்சியில் உள்ள இரண்டு அங்காடிகளை கீழ்வேளூர் சட்டமன்ற உறுப் பினர் நாகைமாலி ஆய்வு செய்தார். நியாய விலை கடைகளில் வழங்கப்படுகிற பொருட்கள் தரமானதாக இருக்கிறதா, மாதந்தோறும் வழங்கப்படுகிற பொருட் கள் சரியாக சென்றடை கிறதா என மக்களிடம் விசா ரித்தார். ரேசன் பொருட்கள் வாங்க வந்த மக்கள், அங் குள்ள குறைகளை சட்ட மன்ற உறுப்பினரிடம் தெரி வித்தனர். மக்கள் தெரிவித்த கோரிக்கை உடனடியாக நிறைவேற்றப்படும் என்று வாக்குறுதி அளித்தார்.