நாகப்பட்டினம், ஜுன் 20 - தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் ஏழுமுனை பிரச்சார இயக்கத்தின் ஒரு பகுதியாக நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களுக்கான பிரச் சாரம் நாகப்பட்டினம் மாவட் டம் வேதாரண்யம் கோட்டாட் சியர் அலுவலகம் முன்பு துவங்கியது. ஜனவரி 1 முதல் வழங்க வேண்டிய அகவிலைப்படி உயர்வை வழங்கிட வேண் டும். தொகுப்பூதியம்-மதிப் பூதியம், அவுட்சோர்சிங் முறைகளை ரத்து செய்து விட்டு முறையான ஊதிய விகிதத்தில் காலிப் பணி யிடங்களை நிரப்பிட வேண்டும். தேவைக்கு ஏற்ப வேலை பளுவிற்கு ஏற்ப புதிய பணியிடங்களை உரு வாக்கி, அதனை கால முறை ஊதியத்தில் நிரப்பி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்கிட வேண்டும் உள்ளிட்ட கோரிக் கைகளை முன்வைத்து தமிழ்நாடு முழுவதும் ஏழு முனைகளிலிருந்து பிரச்சார இயக்கம் நடைபெற்றது. நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற பிரச்சார இயக்கத்தில் அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் அ.தி.அன்பழகன் உரை யாற்றினார். மாநிலச் செயலாளர் சா.டேனியல் ஜெயசிங் சிறப்புரையாற்றி னார். மாவட்டப் பொருளா ளர் ப.அந்துவன் சேரல் நன்றி கூறினார். தொழிற்சங்க கூட்டமைப்பு தலைவர் சு. சிவக்குமார், மாவட்டத் தலை வர் பா.ராணி ஆகியோர் கலந்து கொண்டனர்.