தேனி, பிப்.9- தமிழ் வளர்ச்சித்துறை யின் சார்பில் தேனி ஆட்சி யர் அலுவலகத்தில் நடை பெற்ற ஆட்சிமொழி பயில ரங்கம் - கருத்தரங்கில் தமிழ்ச்செம்மல் விருது பெற்ற தமிழ்நாடு முற்போக்கு எழுத் தாளர்-கலைஞர்கள் சங்கத் தின் எழுத்தாளர் தேனி சீரு டையானுக்கு மாவட்ட ஆட்சி யர் ஆர்.வி.ஷஜீவனா சால்வை அணிவித்து பாராட்டினார். இக்கருத்தரங்கில், ஆட்சிமொழி வரலாறு சட்டம், ஆட்சிமொழிச் செய லாக்கம், அரசாணைகள், கணினித் தமிழ், மொழிப் பயிற்சி, அலுவலகக் குறிப்பு கள், கடித வரைவுகள், செயல் முறை ஆணைகள் தயா ரித்தல், மொழிப்பெயர்ப்பு, கலைச்சொல்லாக்கம் குறித்து தமிழறிஞர்கள், அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. முன்னதாக ஆட்சி மொழிக் கருத்தரங்கில் 2020 ஆம் ஆண்டு ஆட்சிமொழித் திட்டச் செயலாக்கத்தில் சிறந்து விளங்கிய தேனி அர சுத் தேர்வுகள் உதவி இயக்கு நர் அலுவலகத்திற்கு மாவட்ட ஆட்சியர் கேடயம் வழங்கினார். அதனைத் தொடர்ந்து 2021ஆம் ஆண்டுக்கான தமிழ்ச்செம் மல் விருது பெற்ற எழுத்தா ளர் தேனி சீருடையான் அவர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவரால் சால்வை அணிவித்து சிறப்பு செய்யப்பட்டது. இந்நிகழ்வின் போது, தமிழ்வளர்ச்சித்துறை இயக்குநர் முனைவர் ந. அருள், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் இரா.தண்ட பாணி, தமிழ் வளர்ச்சித் துறை துணை இயக்குநர் முனைவர் பெ.சந்திரா, உதவி இயக்குநர் பெ. இளங்கோ அவர்கள், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சு.ஜெகவீரபாண்டியன், தமிழறிஞர்கள், அரசுத் துறை அலுவலர்கள், பணி யாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.