கடமலைக்குண்டு, பிப்.18- தேனி மாவட்டம், கட மலைக்குண்டு கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு அய்யனார்புரம், அண்ணா நகர், ஆத்துப்பட்டி உள் ளிட்ட கிராமங்களை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். வெளி யூர் மாணவ-மாணவிகள் அனைவரும் அரசின் இலவச பஸ் பாஸ் பயன்படுத்தி வரு கின்றனர். இந்த பஸ் பாஸ் அரசு டவுன் பஸ்களில் மட்டுமே பயன்படுத்த முடி யும். இந்நிலையில் மாலை நேரம் மயிலாடும்பாறையில் இருந்து கடமலைக்குண்டு வழியாக தேனிக்கு 2 அரசு டவுன் பஸ்கள் மட்டுமே இயக்கப்படுகிறது. எனவே பள்ளி முடிந்து ஊர்களுக்கு திரும்பும் மாணவ-மாணவி கள் டவுன் பஸ்களில் இடம் பிடிக்க ஒருவரை ஒருவர் முண்டியடித்து ஏறும் நிலை உள்ளது. மேலும் இடப்பற் றாக்குறை காரணமாக மாண வர்கள் படிக்கட்டுகளில் தொங்கியவாறு ஆபத்தான முறையில் பயணம் மேற் கொண்டு வருகின்றனர். எனவே பள்ளி மாணவ-மாண விகள் நலன் கருதி மாலை நேரங்களில் கடமலைக் குண்டு வழியாக தேனிக்கு கூடுதல் டவுன் பஸ்கள் இயக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.