districts

img

பெண்ணிற்கு பாலியல் தொல்லை: உடற்கல்வி ஆசிரியர் கைது

ஆண்டிப்பட்டி அருகே பெண்ணை ஆபாசமாக புகைப்படம் எடுத்து பாலியல் தொல்லை கொடுத்த அரசு பள்ளி உடற்கல்வி ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.  

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகேயுள்ள கதிர்நரசிங்கபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் அருள்குமரன். இவர் கன்னியப்பபிள்ளைபட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.  திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலை சேர்ந்த இவரது தோழி ஒருவர், வேலை சம்பந்தமாக தேனி வரும் போது இவரது வீட்டில் தங்கி வந்துள்ளார்.  

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அருள்குமரன் தோழி மற்றும் அவரது 27 வயது மகளுடன் அருள்குமரன் வீட்டில் தங்கியுள்ளார். அப்போது அவருடைய மகளை பலமுறை ரகசியமாக ஆபாசமாக படம் எடுத்து பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. மேலும், அவருடைய மகளை திருமணம் முடித்தது போல புகைப்படம் எடுத்து யாரையும் திருமணம் செய்யக்கூடாது என்று தாயையும், மகளையும் தொலைபேசியில் மன ரீதியாகவும், பாலியல் ரீதியாகவும் துன்புறுத்தியதாக தெரிகிறது.  

இதனையடுத்து பெண்ணின் தாய், ஆண்டிப்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததின் பேரில் போலீசார் அருள்குமரனை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் இந்த சம்பவத்திற்கு உடந்தையாக இருந்த அருள்குமரனின் அம்மா சரோஜா, அப்பா முருகேசன், தங்கை மீனா ஆகிய 3 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

;