districts

img

தேனியில் புகைப்பட -டிஜிட்டல் கண்காட்சி மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்

தேனி, மார்ச் 1- சென்னை மண்டல மத்  திய மக்கள் தொடர்பகத்தின் சார்பில் தேனியில் அறியப் படாத சுதந்திரப் போராட்ட வீரர்கள், ஒன்றிய அரசின் மக்கள் நலத்திட்டங்கள் மற்  றும் சர்வதேச சிறுதானியங் கள் ஆண்டு ஆகியவை குறித்த  மூன்று நாள் புகைப்பட மற்  றும் டிஜிட்டல் கண்காட்சியை  தேனி மாவட்ட ஆட்சியர் ஆர்.வி.ஷஜிவனா துவக்கி வைத்தார். தேனி என்ஆர்டி நினைவு மண்டபத்தில் நடைபெற்ற தொடக்க நிகழ்ச்சிக்கு மத் திய மக்கள் தொடர்பகம் மற்றும் பத்திரிகை தகவல்  அலுவலக கூடுதல் தலைமை இயக்குனர் எம்.அண்ணா துரை தலைமை வகித்தார். தேனி நகர் மன்ற தலைவர் ரேனுப்பிரியா பாலமுருகன் முன்னிலை வகித்தார். மாவட்ட  ஆட்சியர் ஷஜீவனா புகைப் படக் கண்காட்சியினை திறந்து வைத்தார் .மகாத்மா காந்தி யின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்  தினர். விழாவில் தமிழ்ச்செம்  மல் விருது பெற்ற எழுத்தா ளர் தேனி சீருடையான் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். நிகழ்ச்சியின் இறுதியில் பல்வேறு போட்டிகளில் வெற்றி  பெற்ற கல்லூரி மாணவ மாணவியர்களுக்கு பரிசு கள் மற்றும் பாராட்டு சான்றி தழ்கள் வழங்கப்பட்டன.
செய்தியாளர்களுக்கு  புத்தாக்க பயிற்சி 
தேனி தனியார் விடுதி யில் பத்திரிகை தகவல் அலு வலகம் சார்பில் ஊரக செய்தி யாளர்களுக்கு புத்தாக்க பயிற்சி முகாம் நடைபெற் றது. மத்திய மக்கள் தொடர்ப கம் மற்றும் பத்திரிகை தக வல் அலுவலக கூடுதல் தலைமை இயக்குனர் எம்.அண்ணாதுரை தலைமை வகித்தார். மேகமலை புலி கள் காப்பக துணை இயக்கு நர் எஸ்.ஆனந்த், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர்  டி.மோகன்குமார், வேளா ண்மை துணை இயக்குநர் சங்கர் உள்ளிட்டோர் கருத்து ரையாற்றினர். இந்த நிகழ்ச்சியின் போது பாண்டிச்சேரி மத்திய மக்கள் தொடர்பு கள அலுவலகத் தின் துணை இயக்குனர் சிவக்குமார்,மதுரை கள  விளம்பர உதவியாளர் போஸ் வெல் ஆசிர் மற்றும்  திருநெல்வேலி கள விளம்பர  உதவியாளர் வேலமுருகன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.