districts

10 அரசுப்பள்ளி மாணவிகளுக்கு மருத்துவப் படிப்பிற்கு வாய்ப்பு

தேனி, ஜன.29- நீட் தேர்வில் அரசு பள்ளி மாண வர்களுக்கு ஒதுக்கப்பட்ட 7.5 சத வீத உள்ஒதுக்கீட்டின் மூலம் தேனி மாவட்டத்தில் 10 மாணவியர் மருத் துவப் படிப்பிற்கு தேர்வாகி உள்ளனர். தேனி மாவட்டம் தேவாரம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி செல்வ இனிய மதி, மேலச்சிந்தலை சேரி அரசு பள்ளி மாணவி புவ னேஸ்வரி, கம்பம் அரசு மேல் நிலைப்பள்ளி மாணவி ஜெய தர்ஷினி, ரங்கசமுத்திரம் அரசு பள்ளி மாணவி சிவரஞ்சனி ஆகி யோர் நீட் தேர்வு மூலம் மருத்துவப் படிப்பிற்கு தேர்வாகி உள்ளனர். கம்பம் ஆங்கூர் ராவுத்தர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி கள் அல்பினா பானு, நுபைல் ரஹ்மத், கம்பம் முகைதீன் அரசு  பெண்கள் மேல்நிலைப் பள்ளி யைச் சேர்ந்த ரிஸ்வானா பர்வீன், ஓடைப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த உஷாநந்தினி, காமயகவுண்டன்பட்டி அரசுப் பள்ளி மாணவி சிபியா, குச்சனூர் அரசு பள்ளி மாணவி யோகிதா உள்ளிட்ட 10 பேர் அரசு இட ஒதுக் கீட்டில் மருத்துவப் படிப்பிற்கு தேர் வாகி உள்ளனர்.இதில் 7பேர் அரசு மருத்துவக்கல்லூரியையும் மீதம் 3 பேர் தனியார் கல்லூரியையும் தேர்வு செய்துள்ளனர்.