districts

img

கண்ணகி கோவில் விழா முன்னேற்பாட்டு பணிகள்

தேனி, மார்ச் 30- தேனி மாவட்டம் தமிழக- கேரள எல்லையில் அமைந் துள்ள மங்கலதேவி கண்ணகி கோயில் சித்திரை முழு நிலவு விழா ஏப்ரல் 16 அன்று நடைபெற வுள்ளதை முன்னிட்டு, தேக் கடி ராஜீவ்காந்தி கலை யரங்கத்தில் புதனன்று தேனி மாவட்ட ஆட்சியர் க.வீ.முரளீ தரன் தலைமையில், இடுக்கி மாவட்ட ஆட்சியர் ஷீபா ஜார்ஜ் முன்னிலையில் முன்னேற் பாட்டு பணிகள் குறித்த ஒருங்கி ணைப்புக் குழு கூட்டம் நடைபெற்றது. இதில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவிண் உமேஷ் டோங்கரே, திரு வில்லிபுத்தூர் மேகமலை புலி கள் காப்பக துணை இயக்கு நர் ஆனந்த், மாவட்ட வன அலு வலர் வித்யா, மாவட்ட வரு வாய் அலுவலர் தி.சுப்பிரமணி யன், கூடுதல் காவல் கண்கா ணிப்பாளர் ஸ்ரேயாகுப்தா, உத்தமபாளையம் வருவாய் கோட்டாட்சியர் செல்வி கௌ சல்யா, வட்டார போக்குவரத்து அலுவலர் செல்வக்குமார், தேனி மற்றும் இடுக்கி மாவட்டங் களைச் சார்ந்த அரசுத்துறை அலுவலர்கள், கண்ணகி கோவில் அறக்கட்டளை நிர் வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.