தென்காசி, மே 29 விசைத்தறி தொழிலுக்கு தேவையான நூல் வரலாறு காணாத வகையில் உயர்ந் துள்ளது. இதனால் விசைத் தறி தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிடக்க்கப்பட்டுள்ளது. இந்நிலை தொடர்ந்தால் விசைத்தறி தொழிலாளர்களு க்கு கஞ்சித் தொட்டித் திறப்ப தைத் தவிர வேறு வழி யில்லை என்ற நிலைமை உருவாகி உள்ளது. இந்நிலையில் தமிழ்நாடு விசைத்தறி தொழிலாளர் சங்கம் சிஐடியு சார்பில் சங்க ரன்கோவில் திருவேங்கடம் சாலையில் மத்திய மோடி அரசு நூல் விலை உயர்வு குறைப்பதற்கு உரிய நடவ டிக்கை எடுப்பதோடு நெச வாளர்களின் வாழ்வாதா ரத்தை பாதுகாக்க வேண்டும் என்று வலியுறுத்தி ஆர்ப் பாட்டம் தமிழ்நாடு விசைத்தறி தொழிலாளர் சங்க புளி யங்குடி நிர்வாகி எஸ். மாரி யப்பன் தலைமையில் நடை பெற்றது. ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்து தமிழ்நாடு விசைத்தறி தொழிலாளர் சம்மேளன நிர்வாகி ஆர். சோமசுந்தரம் பேசினார், நிறைவு செய்து சிஐடியு மாநில துணைத்தலைவர் எம். மகாலட்சுமி பேசினார். ஆர்ப்பாட்டத்தில் சிஐடியு தென்காசி மாவட்ட தலை வர் அயுப்கான், விசைத்தறி சங்க செயலர் ரத்னவேலு சுப்ரமணி, சிபிஎம் சங்கரன் கோவில் வட்டாரச் செயலா ளர் அசோக் ராஜ் உள்ளிட் டோர் கலந்து கொண்டனர்.