மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாணவர் அரங்க மாநில பயிலரங்கம் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் ஜூன் 28, 29, 30 தேதிகளில் நடைபெற்றது. பல்வேறு அரசியல், தத்துவார்த்த தலைப்புகளில் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர்கள் என்.குணசேகரன், எஸ்.கண்ணன், மாநிலக்குழு உறுப்பினர்கள் கே.ஜி.பாஸ்கரன், எஸ்.பி.ராஜேந்திரன், ஜி.செல்வா, தென்சென்னை மாவட்ட செயற்குழு உறுப்பினர் ச.லெனின் ஆகியோர் கருத்துரை நிகழ்த்தினர். மாணவர் அரங்கத்தின் கோ.அரவிந்தசாமி, தௌ.சம்சீர் அகமது, கட்சியின் தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் கே.பி.ஆறுமுகம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.