தூத்துக்குடி, பிப்.19 தூத்துக்குடி மீன்வளக்கல்லூரியில் “ஒட்டுண்ணுயிரி தொழில் நுட்ப முறையில் மீன் வளர்ப்பு” குறித்த ஒரு நாள் வளாக வழி யிலான பயிற்சி வருகிற 24ஆம் தேதி நடைபெற உள்ளது தமிழ் நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தின் ஒரு அங்க மான தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் “ஒட்டுண்ணு யிரி தொழில் நுட்ப முறையில் மீன் வளர்ப்பு’’ பற்றிய ஒரு நாள் வளாக வழியிலான பயிற்சி 24.02.2022 அன்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை வழங்கப்பட உள்ளது. இப்பயிற்சியில் ஒட்டுண்ணுயிரி என்றால் என்ன, அதன் முக்கியத்துவம், இத்தொழில் நுட்பத்திற்கேற்ற நீர் வாழ் உயிரினங்களின் வளர்ப்பு முறைகள், பயன்பாடுகள், செயல் திறன், மற்றும் பொருளாதார மேலாண்மை ஆகிய தலைப்புகளில் தொழில் நுட்ப வகுப்பு பயிற்சி அளிக்கப்படும். இப்பயிற்சியில் கலந்து கொள்ள விருப்ப முள்ள அனைவரும் ரூ.300 செலுத்தி பதிவு செய்து கொள்ள வேண்டும். பயிற்சியா ளர்கள் நேரடியாகவோ அல்லது கல்லூரி வங்கி கணக்கு (வாயிலாகவோ) பணத்தை செலுத்தலாம். பயிற்சியின் முடிவில் பயிற்சி யாளர்களின் சான்றிதழ் மற்றும் பயிற்சி கையேடு வழங்கப்படும். இப்பயிற்சியில் கலந்து கொள்ள விருப்பம் உள்ள தொழில் முனைவோர் மற்றும் இதர நபர்கள் அனைவரும் 23.02.2022 மாலை 5 மணிக்குள் அலை பேசி மூலமாக அல்லது கீழ்க்கண்ட முகவரியில் தொடர்பு கொண்டு கண்டிப்பாக பதிவு செய்து கொள்ள வேண்டும்.
பதிவு செய்ய தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:
பேராசிரியர் மற்றும் தலைவர், மீன் வளர்ப்பு துறை, மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், தூத்துக்குடி - 628 008 அலைபேசி எண்: (8072208079. 09442288850) மின் அஞ்சல்: (anix@tnfu.ac.in, athithan@tnfu.ac.in