districts

மருதவனம் அரசுப் பள்ளியை தரம் உயர்த்துக! சிபிஎம் உண்ணாவிரதப் போராட்டம்

திருத்துறைப்பூண்டி, செப்.28 - திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை ஒன்றியம் மருதவனத்தில் அமைந்துள்ள அரசு மேல்நிலைப் பள்ளியை தரம் உயர்த்தக் கோரியும் அடிப்படை வசதி களை செய்ய வலியுறுத்தியும் மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சியின் முத்துப்பேட்டை ஒன்றிய குழு சார்பில் புதனன்று உண்ணா விரதப் போராட்டம் துவங்கப்பட்டது. ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றியச் செயலாளர் கே.பழனிச்சாமி தலைமை வகித்தார். கோரிக்கைகளை விளக்கியும் அடிப்படை வசதிகளை செய்து தராத நிர்வாகத்தை கண்டித்தும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் ஐ.வி.நாகராஜன் உரையாற்றினார். மாவட்டக் குழு உறுப்பினர் கே.வி.ராஜேந்திரன், டி. சுப்பிரமணியன் மற்றும் ஒன்றியக் குழு உறுப் பினர்கள், மாதர் சங்க ஒன்றியச் செயலா ளர் தெய்வசுந்தரி, வாலிபர் சங்க ஒன்றியச்  செயலாளர் ராகவன் மற்றும் ஒன்றிய, கிளை  உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். பின்ன அங்கு வந்த அதிகாரிகள், 15 நாட்க ளுக்குள் தண்ணீர் மற்றும் சமையல் கூடத்தை  அமைத்து தருவது. ஆறு மாதத்தில் பள்ளியை சுற்றி சுற்றுச்சுவர் அமைத்து தரு வதற்கான நிதியை ஏற்பாடு செய்து முடிப்பது  என உறுதியளித்ததின் பேரில் போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது.

;