திருவாரூரில் நடைபெற்றுவரும் புத்தகத்திருவிழாவில் எழுத்தாளர் ஐ.வி.நாகராஜன் எழுதிய “புரட்சியாளர் மாவோ”, “காவிரியும் பூவிரியின்”, “நமது குழந்தைகள்” ஆகிய புத்தகங்களை தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் வெளியிட்டது. மாவட்ட ஆட்சியர் தி.சாருஸ்ரீ, மாவட்ட வருவாய் அலுவலர் பா.சிதம்பரம் ஆகியோர் புத்தகங்களை வெளியிட தமுஎகச மாவட்டத் தலைவர் எம்.சௌந்தரராஜன், மாவட்டச் செயலாளர் ஜி.வெங்கடேசன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.