திருவாரூர், செப்.24 - தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்- கலைஞர்கள் சங்கம் மற்றும் திரை இயக்கம் சார்பாக திருவாரூர் மாவட்டம் தைலம்மை திரையரங்கில் நடைபெற்று வந்த உலக திரைப்பட விழா ஞாயிறன்று நிறைவடைந்தது.
மாநில துணைத் தலைவர் கவிஞர் நந்தலாலா தலைமையில் வரவேற்புக்குழுத் தலைவர் ஐ.வி.நாகராஜன் வரவேற்புடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார் துவக்கி வைத்தார்.
செப்டம்பர் 18 அன்று துவங்கி 22 ஆம் தேதி வரை நடை பெற்றது. செப்டம்பர் 22 ஞாயிற்றுக் கிழமையன்று நிறைவு நாள் நிகழ்ச்சி நடைபெற்றது.
நிறைவு விழாவில் தமுஎகச மாநிலத் தலைவர் மதுக்கூர் ராம லிங்கம் தலைமை வகித்து உரை யாற்றினார். கடந்த ஐந்து நாட்கள் நடைபெற்ற திரையிடல் குறித்தும் திரையிடப்பட்ட உலகத் தர படத்தின் உள்ளடக்க சிறப்பு அம்சத்தை யும், தங்களுக்கு கிடைத்த அனு பவங்களையும் மாநிலம் முழு வதும் இருந்து பங்கேற்ற திரை ஆர்வலர்கள் பகிர்ந்துகொண்டனர்.
முன்னதாக திருவாரூர் சட்ட மன்ற உறுப்பினர் பூண்டி கே.கலை வாணன் மற்றும் ஒன்றிய பெருந் தலைவர் தேவா, நகர்மன்ற உறுப்பினர் வாகை பிரகாஷ், தைலம்மை தியேட்டர் உரிமை யாளர் சங்கர் உள்ளிட்டோர் வாழ்த்து ரை வழங்கினர். உலகத் திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட ‘போகுமிடம் வெகு தூரம் இல்லை, கற்பரா, ரயில்’ ஆகிய தமிழ்ப் படங் களின் இயக்குநர்கள், எடிட்டர் லெனின் ஆகியோர் பங்கேற்று சிறப்பித்தனர். மேலும், இதில் பல்வேறு மொழிகளின் 24 திரைப்படங்கள் வெளியிடப்பட்டன.
விழா துவக்கம் முதல் சிறப்பாக செயல்பட்ட, திரை இயக்க இயக்குநர் சிவக்குமார், திரைப்பட ஒருங்கிணைப்பாளர் அய்.தமிழ்மணி மற்றும் தமுஎகச முன்னாள் மாநிலத் தலைவர் எழுத்தாளர் ச.தமிழ்செல்வன், மாநில துணைப்பொதுச் செய லாளர் கவிஞர் களப்பிரன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஸ்டாலின் சரவணன் உள்ளிட்ட அனை வருக்கும் விழாக்குழுவின் சார்பாக நினைவுப் பரிசு வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது. மாவட்டப் பொருளாளர் மு.செல்வராஜ் நன்றி கூறினார்.
மாவட்டத் தலைவர் மு.சௌந்தர ராஜன், மாவட்டச் செயலாளர் ஜி.வெங்கடேசன் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.
திரைப்பட விழாவில் பெண்கள், இளைஞர்கள் பெருமளவில் கலந்து கொண்டனர்.