திருவாரூர், ஆக.6 - திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி ஒன்றியத்துக்குட்பட்ட இலவங்கார்குடி ஊராட்சியில் இயங்கி வரும் பவித்திர மாணிக்கம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் வகுப்பறை வசதிகள் இன்றி மாண வர்கள் மரத்தடியில் பயின்று வருகின்றனர். இந்நிலையில் திருவண்ணாமலையில் மாநில அளவிலான கராத்தே உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் பள்ளி விளையாட்டு மேம்பாட்டு நிறுவனம் சார்பில் நடைபெற்றன. இதில் இப்பள்ளியில் 6 ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் மிதின்நிதின் என்பவர் கராத்தே போட்டியில் தங்க பதக்கமும், யோகா போட்டியில் வெண் கலப்பதக்கமும் வென்றுள்ளார். அதே வகுப்பில் படிக்கும் ஸ்ரீநாத் என்ற மாணவர் யோகா போட்டியில் பங்கு பெற்று வெள்ளி பதக்கம் வென்றுள்ளார். இப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களை தலைமை ஆசிரியை ஜெயந்தி மற்றும் ஆசிரி யர்கள், பெற்றோர்கள் பாராட்டினர். போதிய வகுப்பறைகள் இல்லாமல் மரத்தடியில் படிக்கும் இப்பள்ளியின் மாண வர்கள் மாநில அளவில் பதக்கம் வென்றுள் ளது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள் ளது. மேலும் மாவட்ட நிர்வாகம் உரிய கவனம் செலுத்தினால், இன்னும் பல சாதனை யாளர்களை உருவாக்கலாம் என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.