districts

img

உயரம் தடைபட்டோருக்கு அடையாளச் சான்று வழங்க வேண்டும்: ஆட்சியரிடம் மனு

திருவாரூர், அக்.22 - அக்டோபர் 25 உலக உயரம் தடைபட்டோர் தினமாக கடைபிடிக்கப்படுகிறது.  இதை முன்னிட்டு நெடுங்காலமாக உயரம் தடைபட்டோருக்கு இருந்து வரும் பிரச்சனைகள் குறித்து தமிழகம் முழுவதும் பல்வேறு கோரிக்கைகளுடன் கூடிய மனு, அந்தந்த மாவட்ட ஆட்சியரிடம் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பாக வழங்கப்பட்டது.  அதன் ஒரு பகுதியாக, திருவாரூர் மாவட்டத்தில் சனிக்கிழமை கோரிக்கை மனு வழங்கப்பட்டது. இதில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஜெ.ஜெயராஜ், ஒருங்கிணைப்பு குழு உறுப்பினர்கள் எப்.கெரக்கோரியா, கே.பாலசுப்பிரமணியன், ரேவதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அடையாளச் சான்று கேட்டு விண்ணப்பித்த உயரம் தடைபட்டோர் அனைவருக்கும் உடனடியாக அடையாளச் சான்று வழங்க வேண்டும். படித்து பட்டம் பெற்ற உயரம் தடைபட்டோருக்கு  வேலைவாய்ப்பு வழங்கிட வேண்டும். உயரம் தடைபட்டோருக்கு அவர்களின் உகந்த வகையில் தொகுப்பு வீடுகள் அமைத்து தர வேண்டும். தற்போது மாதம் வழங்கப்படும் ஊதிய தொகை போதுமானதாக இல்லை. எனவே உதவித்தொகையை ரூ.5000 ஆக உயர்த்தி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மனுவானது வழங்கப்பட்டது.