districts

img

சக்கர கொத்தங்குடி நெல் கொள்முதல் நிலையத்தை திறக்க சிபிஎம் கோரிக்கை

திருவாரூர், செப்.13 - திருவாரூர் மாவட்டம் நன்னிலம் ஒன்றி யம் சக்கர கொத்தங்குடியில் தமிழக அரசின்  நேரடி நெல் கொள்முதல் நிலையம் உள்ளது.  குறுவை சாகுபடி முடிந்த நிலையில் அறு வடை செய்யப்பட்ட  500-க்கும் மேற்பட்ட  நெல் மூட்டைகள் இந்த நேரடி கொள்முதல்  நிலையத்தில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. ஆனாலும் விவசாயிகளுக்கு ஏமாற்றம் அளிக்கும் வகையில், இந்த நெல் கொள் முதல் நிலையம் திறக்கப்படாத நிலையில் உள்ளது. இந்நிலையில் பல்வேறு கட்சி  நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக  அவ்வழி யாக வந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  மாநில குழு உறுப்பினர் ஐ.வி.நாகராஜனை சந்தித்த அப்பகுதி விவசாயிகள் இது குறித்து கவலையுடன் முறையிட்டனர்.  இதனையடுத்து நெல் கொள்முதல் நிலையத்தில் அப்பகுதியினரோடு நேரில் சென்று கள ஆய்வு மேற்கொண்டார். மேலும்,  விவசாயிகளின் குறைகளை கேட்டறிந்தது டன் தொடர்புடைய அதிகாரிகளுக்கு தொலைபேசி வாயிலாக கோரிக்கை வைத்தார். கோரிக்கையின் நியாயத்தைப் புரிந்துகொண்ட மாவட்ட ஆட்சியர், நெல் கொள்முதல் நிலைய மண்டல அதிகாரி யிடம் பேசி நெல் கொள்முதல் நிலையத்தை  திறப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்வதாக விவசாயிகளிடம் தெரிவித்தார்.

;