திருவாரூர், மே 24 - திருவாரூர் மாவட்டத்தில் ஜமாபந்தி மே 25 ஆம் தேதி துவங்கி ஜூன் 1 (சனி, ஞாயிறு மற்றும் திங்கட்கிழமை நீங்கலாக) அந்தந்த வட்டத்திற்குரிய தேதிகளில் தினசரி காலை 10 மணிக்கு துவங்கி நடைபெறவுள்ளது. திருவாரூர் வட்டத்தில், மே 25 முதல் மே 27 வரை மாவட்ட ஆட்சியர் தலைமையி லும், மன்னார்குடி வட்டத்தில் மே 25 முதல் ஜுன் 1 வரை மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையிலும், நன்னிலம் வட்டத்தில் மே 25 முதல் மே 31 வரை திருவாரூர் வருவாய் கோட்ட அலுவலர் தலைமையிலும், நீடாமங்க லம் வட்டத்தில் மே 25 முதல் மே 27 வரை மன்னார்குடி வருவாய் கோட்ட அலுவலர் தலைமையிலும் நடைபெற உள்ளது. வலங்கைமான் வட்டத்தில் மே 25 முதல் 27 வரை மாவட்ட வழங்கல் அலுவலர் தலைமை யிலும், குடவாசல் வட்டத்தில் மே 25 முதல் மே 27 வரை மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் தலைமையி லும், திருத்துறைப்பூண்டி வட்டத்தில் மே 25 முதல் மே 31 வரை தனித் துணை ஆட்சியர் (சமூகப் பாதுகாப்புத் திட்டம்) தலைமையி லும், கூத்தாநல்லூர் வட்டத்தில் மே 25 முதல் மே 27 வரை மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவி யாளர் (நிலம்) தலைமையிலும் நடைபெற வுள்ளது. பொதுமக்கள் தங்களது கோரிக்கை கள் தொடர்பான மனுக்களை அந்தந்த வட்டத்திற்குரிய வருவாய் தீர்வாய அலுவல ரிடம் நேரில் அளித்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் ப.காயத்ரிகிருஷ்ணன் தெரி வித்துள்ளார்.
பெரம்பலூர்
பெரம்பலூர் மாவட்டத்தில் வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) அனைத்து வட்டங் களிலும் மே 27 அன்று காலை 9 மணியள வில் தொடங்கி நடைபெறவுள்ளது. பெரம்ப லூர் வட்டத்தில் ஆட்சியர் தலைமையில் பெரம்பலூர் குறுவட்ட பகுதிக்குட்பட்ட அரணாரை (வடக்கு), அரணாரை (தெற்கு), புதுநடுவலூர், சிறுவாச்சூர், நொச்சியம், கல்பாடி (வடக்கு), கல்பாடி (தெற்கு), அயி லூர் ஆகிய கிராமங்களுக்கு நடைபெற உள்ளது. மேலும் மாலை 4 மணியளவில் குடிகள் மாநாடு மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற உள்ளது. வேப்பந்தட்டை வட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் தலை மையில் வாலிகண்டபுரம் குறுவட்ட பகுதிக் குட்பட்ட தொண்டபாடி, நெய்குப்பை, அனுக்கூர், பிரம்மதேசம், மேட்டுப்பாளை யம்(தெற்கு), மேட்டுப்பாளையம்(வடக்கு), பிம்பலூர், வி.களத்தூர், பேரையூர், எறை யூர், தேவையூர்(வடக்கு), தேவையூர் (தெற்கு) மற்றும் வாலிகண்டபுரம் ஆகிய கிரா மங்களுக்கு நடைபெற உள்ளது. குன்னம் வட்டத்தில் வருவாய் கோட்டாட்சி யர் தலைமையில் வருவாய் தீர்வாயம் (ஜமா பந்தி) வரகூர் குறுவட்ட பகுதிக்குட்பட்ட ஓலைப் பாடி (கிழக்கு), ஓலைப்பாடி (மேற்கு), பரவாய் (மேற்கு), பரவாய் (கிழக்கு), புது வேட்டக்குடி, துங்கபுரம் (வடக்கு), துங்க புரம்(தெற்கு), காடூர்(வடக்கு), காடூர் (தெற்கு), கொளப்பாடி, வரகூர், குன்னம், பெரியம்மாபாளையம், பெரியவெண்மணி (மேற்கு) மற்றும் பெரியவெண்மணி (கிழக்கு) ஆகிய கிராமங்களுக்கு நடைபெற உள்ளது. ஆலத்தூர் வட்டத்தில் பெரம்பலூர், உதவி ஆணையர் (கலால்) தலைமையில் வரு வாய் தீர்வாயம் (ஜமாபந்தி) கூத்தூர் குறுவட்ட பகுதிக்குட்பட்ட தொண்டபாடி, மேல மாத்தூர், அழகிரிபாளையம், ஆதனூர் (வடக்கு), ஆதனூர்(தெற்கு), கூடலூர், கூத்தூர், புஜங்கராயநல்லூர், நொச்சிக் குளம், திம்மூர், சில்லக்குடி (தெற்கு), சில்லக் குடி(வடக்கு) மற்றும் ஜெமீன் ஆத்தூர் ஆகிய கிராமங்களுக்கு நடைபெற உள்ளது. மேலும் மாலை 4 மணியளவில் குடிகள் மாநாடு நடைபெற உள்ளது எனவும் மாவட்ட ஆட்சியரக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
பொன்னமராவதி
பொன்னமராவதி வட்டாட்சியர் அலுவல கத்தில் ஜமாபந்தி நிகழ்வு மே 25 ஆம் தேதி தொடங்குகிறது. 3 நாட்கள் நடைபெறும் ஜமாபந்தி நிகழ்வானது பொன்னமராவதி தாலுகாவுக்கு உட்பட்ட காரையூர் சரக வரு வாய் கிராமங்களுக்கு மே 25 ஆம் தேதியும், அரசமலை சரக வருவாய் கிராமங்களுக்கு மே 26 ஆம் தேதியும், பொன்னமராவதி சரக வருவாய் கிராமங்களுக்கு மே 27 ஆம் தேதியும் வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) நிகழ்வு நடை பெறுகிறது. மே 27 அன்று மாலை 3 மணிக்கு இலுப்பூர் ஆர்டிஓ குழந்தைசாமி தலைமை யில் ஜமாபந்தி மற்றும் குடிகள் மாநாடு நடக்கிறது. இதில் பொதுமக்கள் பட்டா மற்றும் வருவாய்த்துறை தொடர்பான மனுக் களை அளித்து பயன்பெற வட்டாட்சியர் ஜெய பாரதி கேட்டுக் கொண்டுள்ளார்.